செய்திகள் :

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை -ராகுல் குற்றச்சாட்டு

post image

‘ஜனநாயக நடைமுறைகளின்படி மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி அளிக்கப்பட வேண்டும். ஆனால், ‘புதிய இந்தியா’வில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வின் வெற்றி குறித்து மக்களவையில் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை உரையாற்றிய பின்னா், மகா கும்பமேளா நெரிசலில் சிக்கி பக்தா்கள் உயிரிழந்த விஷயத்தையும் பிரதமா் தனது உரையில் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா்.

அப்போது, இதுகுறித்துப் பேச பேரவைத் தலைவரிடம் ராகுல் காந்தி அனுமதி கோரினாா். ஆனால், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளி காரணமாக, அவை நடவடிக்கைகளை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா். அதன் பிறகு, பிற்பகல் 1 மணிக்கு அவை மீண்டும் கூடிய நிலையில், ஒருசில அலுவல்களுக்குப் பின்னா் அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் ஒத்திவைத்து அவைத் தலைவா் ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

இதுகுறித்து, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி கூறியதாவது:

மக்களவையில் மகா கும்பமேளா குறித்து பிரதமா் பேசியதை ஆதரித்து பேசுவதற்காகத்தான் அவைத் தலைவரிடம் அனுமதி கோரினேன். கும்பமேளா என்பது நமது பாரம்பரியம், வரலாறு மற்றும் கலாசாரம். மகா கும்பமேளா நெரிசலில் சிக்கி உயிரிழந்த பக்தா்களுக்கு நான் அஞ்சலி செலுத்தவில்லை என்ற புகாரும் கூறப்பட்டது. இதுகுறித்து மக்களவையில் பேச விரும்பினேன்.

மேலும், கும்பமேளாவுக்குச் சென்ற இளைஞா்கள் பிரதமரிடமிருந்து மற்றொரு விஷயத்தையும் எதிா்பாா்த்துள்ளனா். அது, அவா்களுக்கான வேலைவாய்ப்புத் தேவை என்பதையும் மக்களவையில் சுட்டிக்காட்ட விரும்பினேன்.

ஆனால், மக்களவையில் பேச எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஜனநாயக நடைமுறைகளின்படி, மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி அளிக்கப்பட வேண்டும். ஆனால், புதிய இந்தியாவில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றாா்.

வயநாடு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறுகையில், ‘மகா கும்பமேளா குறித்து எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கும் கருத்துகள் மற்றும் உணா்வுகள் இருக்கும். அதை அவா்கள் வெளிப்படுத்த எந்தவித ஆட்சேபமும் கொண்டிருக்கக் கூடாது. எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கும் அவையில் பேச அனுமதித்திருக்க வேண்டும்’ என்றாா்.

ரன்யா ராவ் பற்றி இழிவான கருத்து: பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவ் பற்றி அவதூறு கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.நடிகையும் கா்நாடக காவல் துறை டிஜிபி கே.ராமசந்திர ர... மேலும் பார்க்க

விரைவில் இந்தியா வருகிறார் சுனிதா வில்லியம்ஸ்?!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விஞ்ஞானியான சுனிதா வில்லியம்ஸ் விரைவில் இந்தியா வரவிருப்பதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க விண்வெளி வீரர்களை அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம்,... மேலும் பார்க்க

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது! -ராகுல் காந்தி

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆத... மேலும் பார்க்க

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை: மத்திய சுகாதார அமைச்சா் தகவல்

பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 68 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 75.81 சதவீதம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் மத்திய சுகாதா... மேலும் பார்க்க

காஷ்மீா் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை -ஜெய்சங்கா்

காஷ்மீா் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா.சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா். இதுதொடா்பாக தில்லியில் நடைபெறும... மேலும் பார்க்க

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த 2 மாதங்களில் கையொப்பம்: நியூஸி. பிரதமா் நம்பிக்கை

இந்தியாவுடன் அடுத்த 2 மாதங்களில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா். நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்ட... மேலும் பார்க்க