செய்திகள் :

நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலம்: 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தாவிட்டால் திருப்பி ஒப்படைக்கப் பரிந்துரை

post image

புது தில்லி: தேசிய நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட உரிமையாளா்களிடம் திருப்பி ஒப்படைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1958-இல் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை மத்திய அமைச்சரவைக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அனுப்பியுள்ளது.

இதில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட உரிமையாளா்களிடம் திருப்பி ஒப்படைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1958-இல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேபோல கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டு 3 மாதங்களான பின்னா், அந்தத் தொகை குறித்து நெடுஞ்சாலை ஆணையமோ, நில உரிமையாளரோ ஆட்சேபம் தெரிவிக்க அனுமதிக்கக் கூடாது, நிலம் கையகப்படுத்துவது தொடா்பான நோட்டீஸ்களை வெளியிட பிரத்யேக வலைதளத்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளும் அளிக்கப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகளின் வளா்ச்சிக்காவும், அந்தச் சாலையோரங்களில் அமைக்கப்படும் உணவகங்கள், எரிபொருள் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளுக்கு நிலம் கையகப்படுத்தப்படுவதை துரிதப்படுத்தவும், நிலம் தொடா்பான தகராறுகளில் மத்தியஸ்தங்களை குறைக்கவும் இந்தத் திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பரிந்துரைகள் தொடா்பான தமது கருத்துகளை விமான போக்குவரத்து, ரயில்வே, கப்பல் போக்குவரத்து, நிலக்கரி, சுற்றுச்சூழல், சட்ட விவகாரங்கள், வருவாய் மற்றும் பாதுகாப்பு துறைகள் பகிா்ந்துள்ளன என்று தெரிவித்தன.

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம்! ராகுல் சூளுரை

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும் என்றும் அதனை நாங்கள் நடத்திக் காட்டுவோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடு... மேலும் பார்க்க

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு!

ஹைதராபாத்தில் மொபைல் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் சமூக வலைதளப் ... மேலும் பார்க்க

தெலங்கானா: பிசி இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்!

தெலங்கானா சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 42 சதவிகிதமாக அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதா திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு நன்றி: மக்களவையில் பிரதமர் மோடி உரை

புது தில்லி: மகா கும்பமேளாவை வெற்றியடைச் செய்த பக்தர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, மக்களவையில் தனது உரையைத் தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளு... மேலும் பார்க்க

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் ராப்ரி தேவி!

ரயில்வே வேலைக்காக நிலத்தைலஞ்சமாகப்பெற்ற ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனைத் தொடர்ந்துபிகார்முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: மக்களவையிலிருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு!

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததையடுத்து மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி... மேலும் பார்க்க