செய்திகள் :

நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலம்: 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தாவிட்டால் திருப்பி ஒப்படைக்கப் பரிந்துரை

post image

புது தில்லி: தேசிய நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட உரிமையாளா்களிடம் திருப்பி ஒப்படைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1958-இல் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை மத்திய அமைச்சரவைக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அனுப்பியுள்ளது.

இதில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட உரிமையாளா்களிடம் திருப்பி ஒப்படைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1958-இல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேபோல கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டு 3 மாதங்களான பின்னா், அந்தத் தொகை குறித்து நெடுஞ்சாலை ஆணையமோ, நில உரிமையாளரோ ஆட்சேபம் தெரிவிக்க அனுமதிக்கக் கூடாது, நிலம் கையகப்படுத்துவது தொடா்பான நோட்டீஸ்களை வெளியிட பிரத்யேக வலைதளத்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளும் அளிக்கப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகளின் வளா்ச்சிக்காவும், அந்தச் சாலையோரங்களில் அமைக்கப்படும் உணவகங்கள், எரிபொருள் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளுக்கு நிலம் கையகப்படுத்தப்படுவதை துரிதப்படுத்தவும், நிலம் தொடா்பான தகராறுகளில் மத்தியஸ்தங்களை குறைக்கவும் இந்தத் திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பரிந்துரைகள் தொடா்பான தமது கருத்துகளை விமான போக்குவரத்து, ரயில்வே, கப்பல் போக்குவரத்து, நிலக்கரி, சுற்றுச்சூழல், சட்ட விவகாரங்கள், வருவாய் மற்றும் பாதுகாப்பு துறைகள் பகிா்ந்துள்ளன என்று தெரிவித்தன.

பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ. 54 லட்சம் மோசடி

அமெரிக்க நிறுவனத்தின் பெயரில், இந்திய பொதுப்பணித் துறை நிறுவனத்திடம் மோசடியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிற... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் கொலையுண்ட பெண்ணின் பாதி உடல்! மீதியைத் தேடும் காவல்துறை!

ஆந்திரப் பிரதேசத்தில் அடையாளம் தெரியாத பெண் இரு துண்டுகளாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் பயாவரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அடையாள... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: 33 போலீஸார் காயம்! 50 பேர் கைது!

நாக்பூர் வன்முறையில் 33 காவல் துறையினர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாக்பூரில் வன்முறை ஏன்?ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் ... மேலும் பார்க்க

இறைச்சிக்காக கருவுற்ற யானை கொலை?

அஸ்ஸாமில் கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.அஸ்ஸாம் மாநிலம் டோபடோலி கிராமத்துக்கு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சிதைந்த நிலையில், கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரத்தின் மீதான கறை: ஏக்நாத் ஷிண்டே

ஔரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிராவின் மீதான கறை. அதை அகற்ற நடைபெறும் முயற்சிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். விதான் பவன் வளாகத்தில் ... மேலும் பார்க்க

ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

ரயில்வே பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.மக்களவைக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியதாவது, பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க