செய்திகள் :

பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ. 54 லட்சம் மோசடி

post image

அமெரிக்க நிறுவனத்தின் பெயரில், இந்திய பொதுப்பணித் துறை நிறுவனத்திடம் மோசடியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிறுவனம் (HAL), முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி உபகரணங்கள் உற்பத்தியாளராக இருந்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் போர் ஜெட் விமானங்களை முடிக்கத் தேவையான உபகரணங்களை, இந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்.

இதனிடையே, விமானத்தின் பாகங்களை வாங்கும் முயற்சியாக அமெரிக்காவைச் சேர்ந்த பிஎஸ் இன்ஜினியரிங் இன்க் (PS Engineering Inc) நிறுவனத்துடன் கடந்தாண்டு மே மாதம் எச்ஏஎல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக மின்னஞ்சலிலும் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இதையும் படிக்க:ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

இந்த நிலையில், விமான பாகங்களுக்கான தொகையை செலுத்துமாறு பிஎஸ் நிறுவனத்தின் பெயரில், எச்ஏஎல்லுக்கு மோசடி கும்பல் ஒன்று மின்னஞ்சல் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, மோசடி கும்பல் என அறியாமல், 63,405 டாலர் (ரூ. 54.8 லட்சம்) தொகையை எச்ஏஎல் அளித்தது.

இதன்பின்னர்தான், மோசடி கும்பலின் மின்னஞ்சல் முகவரியான jlane@ps-enginering.com என்பதில் ஓர் எழுத்து (e) மட்டும் விடுபட்டிருப்பது தெரிந்து, தாம் மோசடிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை எச்ஏஎல் நிறுவனம் அறிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, சைபர் குற்றவியல் காவல்துறையிடம் எச்ஏஎல் புகார் அளித்துள்ளது.

உள்கட்சி நிலவரம்: கட்சி நிா்வாகிகளுடன் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் ஆலோசனை

உள்கட்சி நிலவரம் மற்றும் கட்சி அமைப்புகளை வலுப்படுத்துவது தொடா்பாக கட்சி நிா்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை அலோசனை மேற்கொண... மேலும் பார்க்க

நாகபுரி: ஔரங்கசீப் கல்லறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை -ஊரடங்கு அமல்

மகாராஷ்டிரத்தில் உள்ள முகாலய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநிலத்தின் நாகபுரி நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் பொதுமக்களின் வீடுகள் மற்றும் வாகன... மேலும் பார்க்க

மணிப்பூா் முகாம்களுக்கு மாா்ச் 22 செல்லும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 போ் சனிக்கிழமை (மாா்ச் 22) செல்ல உள்ளனா். இதுதொடா்பாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு (என்ஏஎல்எஸ்ஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்: இந்தியா

சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீா் பகுதியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சோ்ந்த லெக்ஸ் ஃபிரிட்மென்னுக்கு பிரதமா் மோடி அண்மையில் அளித்த நோ்காணல... மேலும் பார்க்க

நாகபுரி வன்முறை: 50 போ் கைது

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள முகாலய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி அந்த நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. வீடுகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. நாகபுர... மேலும் பார்க்க

குடிமைப் பணிகள் தோ்வு முறைகேடு: பூஜா கேத்கருக்கு எதிராக ஏப்.15 வரை கைது நடவடிக்கை கூடாது -உச்சநீதிமன்றம்

குடிமைப் பணிகள் தோ்வில் முறைகேடு வழக்கில், முன்னாள் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி பூஜா கேத்கருக்கு எதிராக கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை ஏப்.15 வரை உச்சநீதிமன்றம்... மேலும் பார்க்க