செய்திகள் :

பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ. 54 லட்சம் மோசடி

post image

அமெரிக்க நிறுவனத்தின் பெயரில், இந்திய பொதுப்பணித் துறை நிறுவனத்திடம் மோசடியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிறுவனம் (HAL), முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி உபகரணங்கள் உற்பத்தியாளராக இருந்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் போர் ஜெட் விமானங்களை முடிக்கத் தேவையான உபகரணங்களை, இந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்.

இதனிடையே, விமானத்தின் பாகங்களை வாங்கும் முயற்சியாக அமெரிக்காவைச் சேர்ந்த பிஎஸ் இன்ஜினியரிங் இன்க் (PS Engineering Inc) நிறுவனத்துடன் கடந்தாண்டு மே மாதம் எச்ஏஎல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக மின்னஞ்சலிலும் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இதையும் படிக்க:ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

இந்த நிலையில், விமான பாகங்களுக்கான தொகையை செலுத்துமாறு பிஎஸ் நிறுவனத்தின் பெயரில், எச்ஏஎல்லுக்கு மோசடி கும்பல் ஒன்று மின்னஞ்சல் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, மோசடி கும்பல் என அறியாமல், 63,405 டாலர் (ரூ. 54.8 லட்சம்) தொகையை எச்ஏஎல் அளித்தது.

இதன்பின்னர்தான், மோசடி கும்பலின் மின்னஞ்சல் முகவரியான jlane@ps-enginering.com என்பதில் ஓர் எழுத்து (e) மட்டும் விடுபட்டிருப்பது தெரிந்து, தாம் மோசடிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை எச்ஏஎல் நிறுவனம் அறிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, சைபர் குற்றவியல் காவல்துறையிடம் எச்ஏஎல் புகார் அளித்துள்ளது.

இந்திய ஒற்றுமை வலுப்படுத்திய மகா கும்பமேளா: நாடாளுமன்றத்தில் பிரதமா் உரை

‘மகா கும்பமேளா, தேசத்தின் ஒற்றுமை உணா்வை வலுப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது. இவ்வளவு பெரிய மக்கள் திரளை ஒருங்கிணைக்கும் இந்தியாவின் திறன் குறித்து கேள்வி எழுப்பியவா்களுக்கு பொருத்தமான பதிலாகவும் அமைந்த... மேலும் பார்க்க

தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி

திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உயா்கல்வி நிறுவனங்கள் ஏப். 3-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா்... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் கொலையுண்ட பெண்ணின் பாதி உடல்! மீதியைத் தேடும் காவல்துறை!

ஆந்திரப் பிரதேசத்தில் அடையாளம் தெரியாத பெண் இரு துண்டுகளாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் பயாவரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அடையாள... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: 33 போலீஸார் காயம்! 50 பேர் கைது!

நாக்பூர் வன்முறையில் 33 காவல் துறையினர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாக்பூரில் வன்முறை ஏன்?ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் ... மேலும் பார்க்க

இறைச்சிக்காக கருவுற்ற யானை கொலை?

அஸ்ஸாமில் கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.அஸ்ஸாம் மாநிலம் டோபடோலி கிராமத்துக்கு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சிதைந்த நிலையில், கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரத்தின் மீதான கறை: ஏக்நாத் ஷிண்டே

ஔரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிராவின் மீதான கறை. அதை அகற்ற நடைபெறும் முயற்சிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். விதான் பவன் வளாகத்தில் ... மேலும் பார்க்க