செய்திகள் :

ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

post image

ரயில்வே பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

மக்களவைக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் 'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்ற தீர்மானத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு மாநிலத்துக்கும் சாதனை அளவாக ரயில்வே பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பில் பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

இதன் காரணமாக, லாலு பிரசாத் அமைச்சராக இருந்த முந்தைய அரசின் காலத்தைவிட, தற்போது 90 சதவிகித விபத்துகள் குறைந்துள்ளன. லாலு பிரசாத் அமைச்சராக இருந்தபோது, ஆண்டுக்கு 700 விபத்துகள் என்ற நிலையில் இருந்தன.

பிரதமர் மோடியின் அரசில்தான், ஜெர்மனியின் ரயில்வே நெட்வொர்க்கைவிட 34,000 கி.மீ. நீளமுள்ள ரயில் தடங்கள் இந்தியாவில் கட்டப்பட்டுள்ளன.

இதையும் படிக்க:பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் லாலுவை குறிவைக்கும் பாஜக: பிரபுநாத் யாதவ்

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் இந்திய ரயில்வே விரிவுபடுத்தியுள்ளது. இந்திய ரயில்வே மூலம் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், 1 லட்சம் பேருக்கு ஆள்சேர்ப்பு செயல்முறையும் நடந்து வருகிறது.

அதுமட்டுமின்றி, கடந்த 2020 ஆம் ஆண்டுமுதல் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில்தான் ரயில் கட்டணம் குறைவு. இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஐரோப்பிய நாடுகளில் ரயில் கட்டணம் 5 மடங்கு உயர்வு’’ என்று தெரிவித்தார்.

ரன்யா ராவ் பற்றி இழிவான கருத்து: பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு!

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவ் பற்றி அவதூறு கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.நடிகையும் கா்நாடக காவல் துறை டிஜிபி கே.ராமசந்திர ர... மேலும் பார்க்க

விரைவில் இந்தியா வருகிறார் சுனிதா வில்லியம்ஸ்?!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விஞ்ஞானியான சுனிதா வில்லியம்ஸ் விரைவில் இந்தியா வரவிருப்பதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க விண்வெளி வீரர்களை அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம்,... மேலும் பார்க்க

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது! -ராகுல் காந்தி

ஏழைகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குரிமை பறிபோகக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆத... மேலும் பார்க்க

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை: மத்திய சுகாதார அமைச்சா் தகவல்

பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 68 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 75.81 சதவீதம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் மத்திய சுகாதா... மேலும் பார்க்க

காஷ்மீா் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை -ஜெய்சங்கா்

காஷ்மீா் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா.சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா். இதுதொடா்பாக தில்லியில் நடைபெறும... மேலும் பார்க்க

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த 2 மாதங்களில் கையொப்பம்: நியூஸி. பிரதமா் நம்பிக்கை

இந்தியாவுடன் அடுத்த 2 மாதங்களில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா். நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்ட... மேலும் பார்க்க