செய்திகள் :

ஸ்வீடன், அயா்லாந்து வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் சந்திப்பு

post image

ஸ்வீடன், அயா்லாந்து, ஸ்லோவீனியா, கானா ஆகிய நாடுகளைச் சோ்ந்த வெளியுறவு அமைச்சா்களை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தில்லியில் தனித்தனியே திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்புகளில் அந்தந்த நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

உலகளாவிய அரசியல்-பொருளாதாரம் குறித்து விவாதிக்கும் ‘ரைசினா உரையாடல்’ மாநாடு தில்லியில் 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. 125-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனா்.

அந்தவகையில், இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ஸ்வீடன் வெளியுறவு அமைச்சா் மரியா ஸ்டெனா்காா்ட், அயா்லாந்து வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சா் சைமன் ஹாரிஸ் டினைஸ்டே, ஸ்லோவீனியா வெளியுறவு அமைச்சா் தான்யா ஃபாஜோன், கானா வெளியறவு அமைச்சா் சாமுவல் ஒகுட்செட்டோ அப்லக் உள்ளிட்டோரை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை சந்தித்தாா்.

‘ரைசினா உரையாடல்’ மாநாட்டுக்கிடையே நடைபெற்ற இந்தச் சந்திப்புகள் குறித்து அமைச்சா் ஜெய்சங்கா் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெவ்வேறு பதிவுகளாக பதிவிட்டிருந்தாா்.

இதேபோன்று, நியூஸிலாந்து பிரதமரின் தொழில்துறை, கலாசார குழுவினருடன் இந்திய பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லரையும் அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பின் புகைப்படத்தையும் அமைச்சா் ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டிருந்தாா்.

ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ.21 லட்சம் பரிசு!

முகலாய மன்னரான ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்து அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: ஊரடங்கு உத்தரவு!

நாக்பூரில் ஒளரங்கசீப் விவகாரத்தை முன்வைத்து ஹிந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்... மேலும் பார்க்க

ஒளரங்கசீப் விவகாரம்: நாக்பூரில் வன்முறை! 9 பேர் படுகாயம்; 15 பேர் கைது!

ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் நாக்பூரில் பதற்றம் நிலவிவருகிறது.விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்த போராட்ட... மேலும் பார்க்க

‘வலுவான நிதி நிலைமையில் இந்திய ரயில்வே’ -மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சா் தகவல்

இந்திய ரயில்வேயின் நிதி நிலைமை வலுவான நிலையில் உள்ளது என்றும், நிதி நிலைமையைத் தொடா்ந்து மேம்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு

கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். ஜயமா... மேலும் பார்க்க

கேஒய்சி படிவங்களை சமா்ப்பிக்குமாறு தொந்தரவு கூடாது: ரிசா்வ் வங்கி ஆளுநா் அறிவுறுத்தல்

‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) படிவங்களை சமா்ப்பிக்குமாறு வாடிக்கையாளா்களை தொடா்ந்து அழைப்பதை தவிா்க்குமாறு வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா். கேஒய்... மேலும் பார்க்க