செய்திகள் :

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு!

post image

ஹைதராபாத்தில் மொபைல் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் சமூக வலைதளப் பிரபலங்கள் பணத்திற்காக பொருள்கள், உணவுகள் போன்ற பலவற்றை விளம்பரம் செய்து வருகின்றனர். இதனால், பலரும் கணிசமாக சம்பாதிக்கும் அதே வேளையில் தவறானவற்றை விளம்பரம் செய்வதால் பிரச்னைகளிலும் சிக்கிக் கொள்கின்றனர்.

ஹைதராபாத் அருகேயுள்ள மியாபூர் பகுதியைச் சேர்ந்த வினய் வங்கலா என்ற நபர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கொடுத்த புகாரின் பேரில் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் 11 பேர் மீது பஞ்சகுட்டா பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க | தெலங்கானா: பிசி இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்!

தொழில் வளர்ச்சித் தொடர்பான பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட அவர் அங்கிருந்த பெரும்பாலான மாணவர்கள் சூதாட்ட செயலிகள் பற்றி விவாதிப்பதைக் கவனித்துள்ளார்.

மேலும், சூதாட்டத்தை ஊக்குவிக்கும் பல சூதாட்ட செயலிகள் மற்றும் வலைதளங்கள் தன்னைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயன்படுத்தப்படுவதையும் அறிந்தார்.

இது தொடர்பாக தனது புகாரில் குறிப்பிட்ட அவர், “பொது சூதாட்டச் சட்டம் 1867-ன் கீழ் இந்தச் செயலிகள் மற்றும் வலைதளங்கள் சூதாட்ட சட்ட விதிமுறைகளை நேரடியாக மீறுகின்றன. மேலும், நானும் ஒருமுறை சூதாட்ட செயலி ஒன்றைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, இதுபற்றி விளம்பரப்படுத்தும் நபர்கள் மீது புகாரளித்தேன்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசு!

அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்துப் பேசிய காவல்துறையினர், “சூதாட்ட செயலிகள் மூலம் எளிதாக பணம் வெல்ல முடியும் என்று இளைஞர்களையும் பொதுமக்களையும் நம்ப வைத்து, இந்த செயலிகள் அவர்களை குறிவைக்கின்றன. எனவே, அதனை விளம்பரப்படுத்திய நபர்கள் மீது சம்பந்தப்பட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது” என தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யூடியுப், இன்ஸ்டாகிராம், சின்னத் திரை பிரபலங்கள் என்று போலீஸ் தெரிவித்தனர்.

நதிநீா் இணைப்பு: மாநிலங்களிடையே கருத்தொற்றுமை உருவாக்க முயற்சி: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

‘நதிநீா் இணைப்பு திட்டங்கள் தொடா்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவ... மேலும் பார்க்க

நாட்டில் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்களைக் கடந்தது!

நாட்டில் நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவில் 1 பில்லியன் (100 கோடி) டன்களைக் கடந்துள்ளது. இது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரிய தருணம் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. ‘நாட்டின் எல்லைப் பக... மேலும் பார்க்க

தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவப் பரிசோதனை: எம்.பி.க்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

‘அவரவா் தொகுதி மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முழுமையான உடல்நல மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களிடம் மத்திய அரசு வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டத... மேலும் பார்க்க

கேள்வி நேரத்துக்கு பதிலாக விவாதம்: மாநிலங்களவையில் திரிணமூல் வெளிநடப்பு

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரம் மற்றும் தனிநபா் மசோதாக்கள் மீதான அலுவல்களுக்கு பதிலாக உள்துறை அமைச்சக செயல்பாடுகள் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, திரிணமூல் காங்கிர... மேலும் பார்க்க

பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது: அமித் ஷா உறுதி

‘பயங்கரவாதத்தை மத்திய அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது’ என்று குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘நக்ஸல் தீவிரவாதம் வரும் 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் முழுமையாக ஒழிக்கப்படும்’ என்று ... மேலும் பார்க்க