செய்திகள் :

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு!

post image

ஹைதராபாத்தில் மொபைல் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் சமூக வலைதளப் பிரபலங்கள் பணத்திற்காக பொருள்கள், உணவுகள் போன்ற பலவற்றை விளம்பரம் செய்து வருகின்றனர். இதனால், பலரும் கணிசமாக சம்பாதிக்கும் அதே வேளையில் தவறானவற்றை விளம்பரம் செய்வதால் பிரச்னைகளிலும் சிக்கிக் கொள்கின்றனர்.

ஹைதராபாத் அருகேயுள்ள மியாபூர் பகுதியைச் சேர்ந்த வினய் வங்கலா என்ற நபர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கொடுத்த புகாரின் பேரில் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் 11 பேர் மீது பஞ்சகுட்டா பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க | தெலங்கானா: பிசி இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்!

தொழில் வளர்ச்சித் தொடர்பான பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட அவர் அங்கிருந்த பெரும்பாலான மாணவர்கள் சூதாட்ட செயலிகள் பற்றி விவாதிப்பதைக் கவனித்துள்ளார்.

மேலும், சூதாட்டத்தை ஊக்குவிக்கும் பல சூதாட்ட செயலிகள் மற்றும் வலைதளங்கள் தன்னைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயன்படுத்தப்படுவதையும் அறிந்தார்.

இது தொடர்பாக தனது புகாரில் குறிப்பிட்ட அவர், “பொது சூதாட்டச் சட்டம் 1867-ன் கீழ் இந்தச் செயலிகள் மற்றும் வலைதளங்கள் சூதாட்ட சட்ட விதிமுறைகளை நேரடியாக மீறுகின்றன. மேலும், நானும் ஒருமுறை சூதாட்ட செயலி ஒன்றைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, இதுபற்றி விளம்பரப்படுத்தும் நபர்கள் மீது புகாரளித்தேன்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசு!

அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்துப் பேசிய காவல்துறையினர், “சூதாட்ட செயலிகள் மூலம் எளிதாக பணம் வெல்ல முடியும் என்று இளைஞர்களையும் பொதுமக்களையும் நம்ப வைத்து, இந்த செயலிகள் அவர்களை குறிவைக்கின்றன. எனவே, அதனை விளம்பரப்படுத்திய நபர்கள் மீது சம்பந்தப்பட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது” என தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யூடியுப், இன்ஸ்டாகிராம், சின்னத் திரை பிரபலங்கள் என்று போலீஸ் தெரிவித்தனர்.

பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ. 54 லட்சம் மோசடி

அமெரிக்க நிறுவனத்தின் பெயரில், இந்திய பொதுப்பணித் துறை நிறுவனத்திடம் மோசடியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிற... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் கொலையுண்ட பெண்ணின் பாதி உடல்! மீதியைத் தேடும் காவல்துறை!

ஆந்திரப் பிரதேசத்தில் அடையாளம் தெரியாத பெண் இரு துண்டுகளாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் பயாவரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அடையாள... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: 33 போலீஸார் காயம்! 50 பேர் கைது!

நாக்பூர் வன்முறையில் 33 காவல் துறையினர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாக்பூரில் வன்முறை ஏன்?ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் ... மேலும் பார்க்க

இறைச்சிக்காக கருவுற்ற யானை கொலை?

அஸ்ஸாமில் கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.அஸ்ஸாம் மாநிலம் டோபடோலி கிராமத்துக்கு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சிதைந்த நிலையில், கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரத்தின் மீதான கறை: ஏக்நாத் ஷிண்டே

ஔரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிராவின் மீதான கறை. அதை அகற்ற நடைபெறும் முயற்சிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். விதான் பவன் வளாகத்தில் ... மேலும் பார்க்க

ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

ரயில்வே பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.மக்களவைக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியதாவது, பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க