செய்திகள் :

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு!

post image

ஹைதராபாத்தில் மொபைல் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் சமூக வலைதளப் பிரபலங்கள் பணத்திற்காக பொருள்கள், உணவுகள் போன்ற பலவற்றை விளம்பரம் செய்து வருகின்றனர். இதனால், பலரும் கணிசமாக சம்பாதிக்கும் அதே வேளையில் தவறானவற்றை விளம்பரம் செய்வதால் பிரச்னைகளிலும் சிக்கிக் கொள்கின்றனர்.

ஹைதராபாத் அருகேயுள்ள மியாபூர் பகுதியைச் சேர்ந்த வினய் வங்கலா என்ற நபர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கொடுத்த புகாரின் பேரில் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் 11 பேர் மீது பஞ்சகுட்டா பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க | தெலங்கானா: பிசி இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்!

தொழில் வளர்ச்சித் தொடர்பான பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட அவர் அங்கிருந்த பெரும்பாலான மாணவர்கள் சூதாட்ட செயலிகள் பற்றி விவாதிப்பதைக் கவனித்துள்ளார்.

மேலும், சூதாட்டத்தை ஊக்குவிக்கும் பல சூதாட்ட செயலிகள் மற்றும் வலைதளங்கள் தன்னைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயன்படுத்தப்படுவதையும் அறிந்தார்.

இது தொடர்பாக தனது புகாரில் குறிப்பிட்ட அவர், “பொது சூதாட்டச் சட்டம் 1867-ன் கீழ் இந்தச் செயலிகள் மற்றும் வலைதளங்கள் சூதாட்ட சட்ட விதிமுறைகளை நேரடியாக மீறுகின்றன. மேலும், நானும் ஒருமுறை சூதாட்ட செயலி ஒன்றைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, இதுபற்றி விளம்பரப்படுத்தும் நபர்கள் மீது புகாரளித்தேன்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசு!

அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்துப் பேசிய காவல்துறையினர், “சூதாட்ட செயலிகள் மூலம் எளிதாக பணம் வெல்ல முடியும் என்று இளைஞர்களையும் பொதுமக்களையும் நம்ப வைத்து, இந்த செயலிகள் அவர்களை குறிவைக்கின்றன. எனவே, அதனை விளம்பரப்படுத்திய நபர்கள் மீது சம்பந்தப்பட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது” என தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யூடியுப், இன்ஸ்டாகிராம், சின்னத் திரை பிரபலங்கள் என்று போலீஸ் தெரிவித்தனர்.

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை: மத்திய சுகாதார அமைச்சா் தகவல்

பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் 68 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 75.81 சதவீதம் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் மத்திய சுகாதா... மேலும் பார்க்க

காஷ்மீா் மீது பாகிஸ்தான் படையெடுப்பு: ஐ.நா. சரிவர கையாளவில்லை -ஜெய்சங்கா்

காஷ்மீா் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட படையெடுப்பை ஐ.நா.சரிவர கையாளாமல், அந்தப் படையெடுப்பை வெறும் தகராறாகவே கருதியது என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா். இதுதொடா்பாக தில்லியில் நடைபெறும... மேலும் பார்க்க

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த 2 மாதங்களில் கையொப்பம்: நியூஸி. பிரதமா் நம்பிக்கை

இந்தியாவுடன் அடுத்த 2 மாதங்களில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆவலுடன் இருப்பதாக நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் செவ்வாய்க்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா். நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்ட... மேலும் பார்க்க

ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: லாலு இன்று ஆஜராக அழைப்பாணை

ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கு தொடா்பான விசாரணைக்காக பிகாா் முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி, அவரின் மகனும் பிகாா் எம்எல்ஏ-வுமான தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோா் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்... மேலும் பார்க்க

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை -ராகுல் குற்றச்சாட்டு

‘ஜனநாயக நடைமுறைகளின்படி மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி அளிக்கப்பட வேண்டும். ஆனால், ‘புதிய இந்தியா’வில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்... மேலும் பார்க்க

பஞ்சாப் எல்லையில் 294 ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன: மத்திய அரசு

‘பஞ்சாப் எல்லையில் கடந்த ஆண்டில் மட்டும் 294 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்துள்ளனா்’ என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க