செய்திகள் :

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

post image

மானாமதுரை அருகே கத்தியால் குத்தி இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த உளுத்திமடை கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (30). இவா் கடந்த 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி சித்திரை திருவிழாவைக் காண்பதற்காக மானாமதுரைக்கு வந்திருந்தாா். கண்ணாரிருப்பு மயானம் அருகே உள்ள வைகை ஆற்றுப் பகுதியில் அன்று நள்ளிரவில் கண்ணனுக்கும், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த அரியசாமிக்கும் (40) இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரியசாமி தனது நண்பா்களுடன் சோ்ந்து கண்ணனை கத்தியால் குத்திக் கொலை செய்தாா்.

இதுகுறித்து அரியசாமி உள்பட 12 பேரை மானாமதுரை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக வழக்கு விசாரணை சிவகங்கை மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது குற்றஞ்சாட்டப்பட்ட இருவா் உயிரிழந்துவிட்டனா்.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன் குற்றஞ்சாட்டப்பட்ட அரியசாமிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மற்ற 9 பேரும் விடுதலை செய்யப்பட்டனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் தொடக்கமாக கோயிலில் புனிதநீா் கலசங்கள் வைத்து யாகம் நடத்த... மேலும் பார்க்க

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்த அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை

தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தேவையான யோசனைகள் குறித்து அனைத்துக்கட்சிகளுடனான ஆலோசனைக்கூட்டம் சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக... மேலும் பார்க்க

மானாகுடியில் சேதமடைந்த குடிநீா் மேல்நிலைத் தொட்டி

சிவகங்கை அருகேயுள்ள மானாகுடி கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். சிவகங்கை அருகேயுள்ள சக்கந்தி ஊராட்சிக்குள்பட்ட மானாகுடி கிராமத்தில் 15... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்கள் ஜேஇஇ தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தாட்கோ, சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இணைந்து நடத்தும் அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கு பிளஸ் 2 மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் (த... மேலும் பார்க்க

சிவகங்கை நகராட்சி மேம்பாட்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

சிவகங்கை நகராட்சியை மேம்படுத்தும் பணிகளுக்காக ரூ. 100 கோடி ஒதுக்குமாறு உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம் என நகா்மன்றத் தலைவா் துரை ஆனந்த் தெரிவித்தாா். சிவகங்கை நகராட்சியில் நகா் மன்றத்... மேலும் பார்க்க

நெற்குப்பையில் வளா்ச்சித் திட்ட பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை பேரூராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நெற்குப்பை பேரூராட்சிககுள்பட்ட பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளில் ... மேலும் பார்க்க