தொகுதி மறுசீரமைப்பு: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?
தில்லி நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு!
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் சர்மாவின் வீட்டில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், அவை யாவும் வதந்தி என்றும் கூறினர்.
இந்த நிலையில், யஷ்வந்த் சர்மா வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக, இந்தியத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே. உப்த்யாய் அறிக்கை சமர்ப்பித்ததாகவும் கூறுகின்றனர்.
உச்ச நீதிமன்ற கொலீஜியம், இந்த அறிக்கையை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையைத் தொடங்கலாம்.
இதையும் படிக்க:வெள்ளை அறிக்கை வெளியிட ஏன் தயக்கம்? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி!
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இந்த நிலையில், தில்லியிலுள்ள அவரது வீட்டில் கடந்த 14-ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்தின்போது, அந்த வீட்டிலுள்ள ஓர் அறையிலிருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்டதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
தீ விபத்து நேரிட்டபோது சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான பணக் கட்டுகள் எரிந்து நாசமானதாகவும் கூறப்படுகிறது. அவர் வீட்டில், மொத்தம் ரூ. 37 கோடி அளவில் பணம் இருந்தது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, தில்லியிலிருந்து நீதிபதி வர்மா அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், இந்த விவகாரத்தில் விரிவான நீதி விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் சம்மதித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, யஷ்வந்த் சர்மா வீட்டில் பணம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்றும், பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் தில்லி தீயணைப்புத் துறை விளக்கமளித்தது.