செய்திகள் :

டிரம்மில் பல துண்டுகளாக கணவரின் உடல்; கொன்றுவிட்டு காதலனுடன் ஹோலி கொண்டாடிய பெண் - உ.பி அதிர்ச்சி!

post image

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த முஸ்கான் என்ற பெண் தனது கணவர் செளரப் ரஜபுத்திற்கு தூக்க மாத்திரை கொடுத்து வெட்டி கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தன்னுடைய ஆண் நண்பர் சாஹில் என்பவருடன் சேர்ந்து கொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி டிரம் ஒன்றில் போட்டு அடைத்துவிட்டு, சிம்லாவிற்கு சென்றார் முஸ்கான். இருவரும் சிம்லாவில் இருந்து வந்த பிறகு போலீஸில் பிடிபட்டனர். முஸ்கானின் தாயாரே தனது மகளை பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளார். முஸ்கானும், அவரது ஆண் நண்பர் சாஹிலும் சேர்ந்து கொலை செய்துவிட்டு சிம்லாவிற்கு சென்று ஹோலி கொண்டாடிய வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது. இருவரும் மகிழ்ச்சியோடு ஹோலி விளையாடியதோடு இருவரும் சேர்ந்து போட்டோவிற்கும் போஸ் கொடுத்துள்ளனர். சிம்லா மட்டுமல்லாது மணாலிக்கும் இருவரும் சென்றுள்ளனர்.

உடல் இருந்த பிளாஸ்டிக் டிரம்

அங்கு சாஹில் பிறந்தநாளை இருவரும் சேர்ந்து கொண்டாடி இருக்கின்றனர். பிறந்தநாள் கேக்கை எடுத்து சாஹிலுக்கு முஸ்கான் ஊட்டி விடுவது போலவும், முத்தமிடுவது போலவும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதோடு அவர்கள் பனிச்சறுக்கில் நடந்து சென்ற வீடியோவும் வெளியாகி இருக்கிறது. போலீஸாரின் விசாரணையில் சாஹில்தான் முஸ்கானுக்கு மதுபழக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. அதோடு சாஹிலுக்கு தேவையான பணத்தை முஸ்கான் தனது கணவர் அனுப்பும் பணத்தில் இருந்து எடுத்து கொடுத்துள்ளார்.

முஸ்கானும், சாஹிலும் மகிழ்ச்சியாக இருந்தபோது முஸ்கான் வீட்டு உரிமையாளர் நேரில் பார்த்துவிட்டார். அவர் இது தொடர்பாக செளரப் ரஜபுத்திடம் தெரிவித்தார். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு ரஜபுத் விவாகரத்து மனு தாக்கல் செய்தார். அதன் பிறகு குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர்.

கைது

அப்படி இருந்தும் முஸ்கான் சாஹிலுடனான தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து வந்தார். கணவனை கொலை செய்து பல துண்டுகளாக வெட்ட திட்டமிட்டு முன்கூட்டியே இரண்டு கத்தியை வாங்கி வந்துள்ளார். அவர் கடைக்காரரிடம் சிக்கன் வெட்ட தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். செளரப்பை மார்ச் 3ம் தேதி கொலை செய்தனர். அதற்கு முன்பு பிப்ரவரி 25ம் தேதியும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மருத்துவ செலவுக்கு ரூ.13 லட்சம் கடன் வாங்கியவரிடம் கந்து வட்டி வசூலித்து, தாக்குதல் - பெண் கைது!

சென்னை அமைந்தகரை, சான்றோர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராஜலட்சுமி (37). இவரின் தம்பி சதீஷ்குமார். கடந்த 2023-ம் ஆண்டு விபத்து ஒன்றில் சதீஷ்குமார் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷ்... மேலும் பார்க்க

விருதுநகர்: தொட்டில் கயிற்றில் ஊஞ்சலாடி விளையாடிய சிறுவன்; கழுத்தில் கயிறு இறுகி பலி

விருதுநகரில் தொட்டில் கயிற்றில் ஊஞ்சலாடி விளையாடிய சிறுவன் கழுத்தில் கயிறு இறுகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர்... மேலும் பார்க்க

நரம்பியல் நோயால் வேலையை இழந்த இளைஞர் விபரீத முடிவு - கடிதத்தை படித்த போலீஸார் அதிர்ச்சி

மும்பையில் வசிக்கும் பெங்களூரைச் சேர்ந்த நவீன் (27) என்பவரின் சகோதரி, மும்பை போலீஸாருக்கு இமெயில் மூலம் ஒரு தகவலை அனுப்பி இருந்தார். அதில் மும்பை வசாய் பகுதியில் வசிக்கும் தனது சகோதரனை கடந்த சில நாள்க... மேலும் பார்க்க

Ooty: "போலீஸ் அடித்து மிரட்டியதால் விஷம் குடித்தேன்" - கூலித்தொழிலாளரின் மரண வாக்குமூல பின்னணி என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள எமரால்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவனய்யா என்கிற குமார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க விவசாயக் கூலித்தொழிலாளி.மனைவி, இரண்டு மகள்கள், இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ள... மேலும் பார்க்க

காட்பாடி: கழுத்தில் 6 அடி நீள பாம்புடன் யாசகம் கேட்ட கும்பல்; பீதியில் ஓட்டமெடுத்த மக்கள்!

`பீதியைக் கிளப்பாம போங்க..’வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிறுத்தப் பகுதியில், கடந்த 18-ம் தேதி இரவு பெண் உள்ளிட்ட நான்கு பேர் 6 அடி நீளமுள்ள பெரிய பாம்புகளை கழுத்திலும், தோள் மீ... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மாணவரைக் கொன்று சடலத்தை முட்புதரில் வீசிய கும்பல்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே நார்த்தவாட பகுதியில் உள்ள முட்புதரில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் சடலம் கிடப்பதாக திருவாலங்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது.இதையடுத்து ச... மேலும் பார்க்க