செய்திகள் :

மோசமான சாலைகளுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்? மத்திய அரசுக்கு ராஜஸ்தான் எம்.பி. கேள்வி!

post image

தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்க வரிகளுக்கு ஏற்றாற்போல சாலைகள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் ராஜஸ்தான் எம்.பி. ஹனுமான் பெனிவால் கேள்வி எழுப்பினார்.

தேசிய நெடுஞ்சாலை 48 வழியாக ஜெய்ப்பூர் - டெல்லி நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் மூலம் சுங்க வரியாக 11,945 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையின் கட்டுமானச் செலவைவிட வசூலிக்கப்படும் சுங்க வரி அதிகமாக இருப்பதாகக் கூறி, ராஜஸ்தான் எம்.பி. ஹனுமான் பெனிவால் கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறியதாவது, ``ஜெய்ப்பூர் - டெல்லி நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட ரூ. 12,000 கோடி சுங்கச் சாவடி வசூலிக்கப்பட்டது. ஆனால், சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும்போது, சாமானிய மக்கள் ஏன் அதனைச் செலுத்த வேண்டும்?

இதையும் படிக்க:மணிப்பூரின் நிலை நமக்கு ஏற்படலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ராஜஸ்தானில் பல தேசிய நெடுஞ்சாலைகள் மோசமான நிலையில் உள்ளன என்பதை அரசு அறிந்திருக்கிறதா? அத்தகைய சாலைகளில் சுங்க வரி வசூல் செய்வது குறித்து அமைச்சகம் விளக்கமளிக்க வேண்டும். சாலை கட்டுமான செலவைவிட அதிக சுங்கச்சாவடி வசூலித்த போதிலும், தேசிய நெடுஞ்சாலைகளின் நிலை மோசமாக உள்ளது.

இதுகுறித்து, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. மோசமான சாலைகளுக்காக பயணிகள் ஏன் சுங்கச்சாவடி செலுத்த வேண்டும்? அதன் விளைவுகளை சாமானிய மக்கள் ஏன் சந்திக்க வேண்டும்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மறைமுகமாக வசூலிக்கப்படும் சுங்கச்சாவடிகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தற்கொலையா? விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது சிபிஐ!

நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்த வழக்கின் விசாரணை அறிக்கையை மத்திய குற்ற புலனாய்வு (சிபிஐ) பிரிவு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சீல் செய்யப்பட்ட கவரில் சனிக... மேலும் பார்க்க

நீதிபதி வீட்டில் கணக்கில் வராத பணம் இருந்ததா? 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

புது தில்லி: பண சா்ச்சையில் சிக்கியுள்ள நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டிலிருந்து கோடிக்கணக்கிலான தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா என்பதை விரிவாக விசாரித்து உண்மையை கண்டறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழிகா... மேலும் பார்க்க

ஒடிசா: மழை, ஆலங்கட்டி மழைக்கு 2 பேர் பலி, 600 வீடுகள் சேதம்

ஒடிசாவில் மழை, ஆலங்கட்டி மழைக்கு 2 பேர் பலியானதோடு 67 பேர் காயமடைந்தனர். ஒடிசா மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு இடியுடன் கூடிய மழை பெய்தது. மழையோடு ஆலங்கட்டி மழையும் பெய்ததால் மக்கள் கடும் அவ... மேலும் பார்க்க

மணிப்பூரில் இருந்து 27 மியான்மர் நாட்டவர் நாடு கடத்தல்

மணிப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்த 27 மியான்மர் நாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.மணிப்பூர் மாநிலம், தெங்னௌபால் மாவட்டத்தில் உள்ள மோரேயில் உள்ள இந்தோ - மியான்மர் வாயிலில... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் கருகிய நிலையில் இரட்டை குழந்தைகள், பெண்ணின் சடலங்கள் மீட்பு

ஜார்க்கண்டில் கருகிய நிலையில் பெண் மற்றும் அவரின் இரட்டை குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 22 வயது பெண் ம... மேலும் பார்க்க

கேரளம்: தேநீர் என நம்ப வைத்து 12 வயது சிறுவனுக்கு மது கொடுத்த பெண் கைது

கேரளத்தில் தேநீர் என நம்ப வைத்து 12 வயது சிறுவனுக்கு மது கொடுத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் பீருமேடு பகுதியில் உள்ள தனது வீட்டில் பெண் ஒருவர் கருப்பு தேநீர் என்று... மேலும் பார்க்க