செய்திகள் :

கேரளம்: தேநீர் என நம்ப வைத்து 12 வயது சிறுவனுக்கு மது கொடுத்த பெண் கைது

post image

கேரளத்தில் தேநீர் என நம்ப வைத்து 12 வயது சிறுவனுக்கு மது கொடுத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் பீருமேடு பகுதியில் உள்ள தனது வீட்டில் பெண் ஒருவர் கருப்பு தேநீர் என்று 12 வயது சிறுவனை நம்ப வைத்து மது கொடுத்துள்ளார்.

சிறுவனின் குடும்பத்தினருக்கு நீண்ட காலமாகத் தெரிந்த அந்தப் பெண், வெள்ளிக்கிழமை மதியம் இந்த சம்பவத்தை செய்துள்ளார்.

மது அருந்திய சிறுவன், தனது சொந்த வீட்டை அடைந்ததும் மயக்கமடைந்தான். சிறுவன் பின்னர் தனது பெற்றோரிடம் உண்மையை கூறியுள்ளான். உடனே அவர்கள் அந்தப் பெண்ணுக்கு எதிராக பீருமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து அந்தப் பெண்ணை கைது செய்த காவல்துறையினர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நாடாளுமன்றத்தில் தென் மாநில பிரதிநிதித்துவம் குறைய விடமாட்டோம்! -முதல்வர் ஸ்டாலின்

குற்றம் சாட்டப்பட்டவர் மலாமலையைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளி பிரியங்கா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.: நிலத்தகராறில் கோழியைக் கொன்ற இருவர் மீது வழக்கு

உத்தரப் பிரதேசத்தில் நிலத்தகராறில் கோழியைக் கொன்றதாக இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம், கர்மல்பூர் கிராமத்தில் நிலத்தகராறில் தனது கோழியை செங்கற்கள் மற்றும் கற்களால் த... மேலும் பார்க்க

தெலங்கானாவில் திடீரென வெடித்த குப்பைத் தொட்டி- தூய்மைப் பணியாளர் பலி

தெலங்கானாவில் குப்பைத் தொட்டியில் இருந்து திடீரென மர்மபொருள் வெடித்ததில் தூய்மை பணியாளர் பலியானார். தெலங்கானா மாநிலம், குசாய்குடா பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை அகற்... மேலும் பார்க்க

கணவருடன் விவாகரத்து! 11 வயது மகனை கழுத்தறுத்து கொன்ற தாய்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் 11 வயது மகனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் ஒருவர் கத்தியால் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில், அவரின் மே... மேலும் பார்க்க

அகர்தலா ரயில் நிலையத்தில் 75.5 கிலோ கஞ்சா பறிமுதல்

அகர்தலா ரயில் நிலையத்தில் 75.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலம், அகர்தலா ரயில் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் வழக்க... மேலும் பார்க்க

பாட்னாவில் மருத்துவமனை இயக்குநர் சுட்டுக்கொலை

பாட்னாவில் மருத்துவமனை இயக்குநர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார், பாட்னாவில் ஆசியா மருத்துவமனை இயக்குநர் சுர்பி ராஜ் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் அதிகாரி அதுலேஷ் ஜா சன... மேலும் பார்க்க

120 அடி உயர 2 தேர்கள் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

ஒசூர் அருகே உஸ்கூர் மத்துரம்மா கோயில் தேர்த் திருவிழாவில் 2 தேர்கள் கவிழ்ந்ததில், இருவர் பலியான நிலையில் 10 பேர் படுகாயமடைந்தனர். கர்நாடக மாநிலம், உஸ்கூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மத்... மேலும் பார்க்க