செய்திகள் :

பாகிஸ்தானில் 2வது குரங்கு அம்மை பாதிப்பு உறுதி!

post image

பாகிஸ்தானில் நடப்பாண்டில் (2025) புதியதாக மற்றொரு நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிந்து மாகாணத்தின் மாலிர் மாவட்டத்திலுள்ள ஜின்னா முதுகலை மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 29 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தக் கல்லூரியின் மருத்துவ அதிகாரி யஹியா துனியோ கூறுகையில், தற்போது குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு 2 நாள்களுக்கு முன்பு உடலில் உண்டான கொப்புளங்களினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரை தற்போது தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹெபடைடிஸ் - சி பாதிப்பும் அவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது உடல்நிலை முன்னேறி வருவதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், அந்த நபரின் மனைவி சமீபத்தில் சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியதாகவும் அவரது உடலிலும் இதேபோன்ற கொப்புளங்கள் உண்டாகி பின்னர் குணமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் மூத்த அரசியல் தலைவர் பலி!

இதனைத் தொடர்ந்து, சிந்து மாகாணத்தின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதினால் அதன் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக அந்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் எல்லை நுழைவு இடங்களில் திரையிடல் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பாகிஸ்தானின் பெஷாவர் வந்தடைந்த பயணி ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

கடந்த 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் 8 குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டது. இந்த பாதிப்புகள் அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த பயணிகளிடம் மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில் உள்நாட்டில் அந்த தொற்றின் பரவல் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்: கடைசி ஓவரில் தில்லி கேபிடல்ஸ் த்ரில் வெற்றி!

விசாகப்பட்டினம்: நடப்பு ஐபிஎல் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயித்த 210 ரன்கள் இலக்கைதில்லி கேபிடல்ஸ் 19.3 ஓவர்களில் எட்டி முதல் வெற்றி... மேலும் பார்க்க

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வா? - அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச... மேலும் பார்க்க

டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம்: விக்ரமராஜா

சேலம் : டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். சேலம் ... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி நாளை ஆலோசனை

சென்னை: தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மாா்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளாா்.த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்: விஜய்

சென்னை: பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம... மேலும் பார்க்க

ஏப். 6-ல் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதல்வா் திறந்து வைக்கிறாா்!

நீலகிரி: நாட்டிலேயே முதன் முறையாக பழங்குடியினா்களுக்கு என 50 படுக்கை வசதிகளுடன், மலை பிரதேசத்தில் அதிநவீன 700 படுக்கைகள் கொண்ட உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஏப்ரல் 6 ஆம் தேதி முதல்வர் மு.க.... மேலும் பார்க்க