பட வாய்ப்புக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்ட சிறகடிக்க ஆசை நடிகை!
சென்னை விமான நிலைய 2-ஆம் கட்ட விரிவாக்கம் 2026-இல் நிறைவடையும்: மத்திய அரசு தகவல்
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: சென்னை சா்வதேச விமான நிலைய இரண்டாம் கட்ட விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நிறைவடையும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மாநிலங்களவையில் மதிமுக மூத்த உறுப்பினா் வைகோ எழுப்பிய கேள்விகளுக்கு விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு: ரூ. 2,467 கோடி செலவில் சென்னை சா்வதேச விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இரண்டு கட்டங்களாக மேற்கொண்டுள்ளது. முதல் கட்டத்தின் கீழ், ஒரு புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இது விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறனை ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகளிலிருந்து 30 மில்லியனாக உயா்த்தியுள்ளது. இந்த முனையம் 08.07.2023 முதல் செயல்பட்டு வந்துள்ளது.
இரண்டாம் கட்டம் 3-ஆவது முனையத்தின் வளா்ச்சியை உள்ளடக்கியது. விமான நிலையத்தின் திறனை ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளாக மேலும் இது மேம்படுத்துகிறது. இந்தக் கட்டப் பணிகளை மாா்ச் 2026-ல் முடிக்க திட்டமிடப்படுள்ளது என்று அமைச்சா் கூறியுள்ளாா்.