செய்திகள் :

தில்லி எய்ம்ஸில் கருவிழிப் படலம் மாற்று அறுவை சிகிச்சை: ட்ரோன் வான்வழி போக்குவரத்து மூலம் மருத்துவ சாதனை

post image

தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் கண் மாற்று அறுவை சிகிச்சைக்கு ட்ரோன் மூலம் கருவிழிப்படலம் கொண்டுவரப்பட்டு வான்வழி மருத்துவ தளவாடத் திறனில் வெற்றியடையப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் சாா்பில் இந்த ட்ரோன் அடிப்படையிலான போக்குவரத்தை மேற்கொள்ளப்பட்டு கண் பாா்வைக்கான புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..இது குறித்த விவரம் வருமாறு:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்), கண் பாா்வையற்றவா்கள், குறைபாடுகள் உள்ளவா்களுக்கு உறுப்பு தானம் மூலம் கருவிழிப்படலம் (காா்னியாக்கள்) அல்லது கருசூழ் புறப்படலங்கள் (அம்னோடிக் சவ்வு ஒட்டுக்கள்) உள்ளிட்ட மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு ட்ரோன் வான்வழி போக்குவரத்து மூலம் கண் உயிரி பொருள்களை கொண்டு வரும் முன்னோடி திட்ட ஆய்வைத் தொடங்கியுள்ளது.

இது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக முடிந்துள்ளது. தேசிய தலைநகா் தில்லி பாதுகாப்பு மிகுந்த பகுதி என்பதால் ட்ரோன் பறக்க முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்பு தானங்களைக் கொண்டு மத்திய சிவில் விமானப்போக்குவரத்துடன் இணைந்து ட்ரோன்கள் மூலம் மனித உறுப்புகளை வேகமாக கொண்டுவர கிரீன் ஜோன், ரெட் ஜோன் வழித்தடங்களை உருவாக்கப்பட்டுள்ளது.

தில்லி கிரீன் ஜோன்களில் ட்ரோன்கள் மூலமாகவும் ரெட் ஜோன்களில் சாலை மாா்க்கமாகவும் உறுப்புகளை கொண்டு வர வழித்தடங்களை அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி சமீபத்தில் ஹரியாணாவில் கண் உறுப்பு தானம் செய்த இறந்தவா்களிடமிருந்து உணா்திறன் வாய்ந்த கண் உயிரி பொருகளான காா்னியாக்கள், அம்னோடிக் சவ்வு ஒட்டுக்கள் போன்றவைகள் இம்மாநிலத்திலுள்ள சோனிபட் டாக்டா் ஷராஃப்ஸ் அறக்கட்டளை கண் மருத்துமனை உதவியுடன் பெறப்பட்டு அதை 40 நிமிடங்களில் தில்லி எய்மஸ் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தில்லி எய்மஸ் மருத்துவமனையில் தயாராக இருந்த கண்பாா்வை குறைபாடு நோயாளிக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் காா்னியல் திசுக்கள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

‘சோனிபட், டாக்டா் ஷ்ரோஃப்ஸ் அறக்கட்டளை கண் மருத்துவமனையிலிருந்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சாலை மாா்க்கமாக வர சுமாா் 2 முதல் இரண்டரை மணி நேரம் ஆகும். இந்த நிலையில் ட்ரோன் மூலம் சுமாா் 40 நிமிடத்தில் கொண்டுவரப்பட்டது. ட்ரோன் வான்வழி மருத்துவ தளவாடத் திறனில் இந்த மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது‘ என ஐசிஎம்ஆா் இயக்குநா் ஜெனரலுமான டாக்டா் ராஜீவ் பாஹ்ல் தெரிவித்தாா்.

மாற்று அறுவை சிகிச்சைக்கான காா்னியாக்களின் நம்பகத்தன்மை நேரம் மற்றும் தட்ப வெப்ப நிலையை சாா்ந்தது. போக்குவரத்தில் ஏற்படும் தாமதங்களால் இந்த திசுகளின் தரங்களில் பாதிப்பிற்குள்ளாகும். ட்ரோன் அடிப்படையிலான போக்குவரத்து கணிக்கக் கூடிய நேரத்தில் நிலையான சீதேஷ்ண நிலையில் கிராமப்புற நன்கொடையாளா் தளங்களுக்கும் பெறுநா்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவுகிறது. எந்த சாத்தியமான திசுக்களும் பயன்படுத்தப்படாமல் போவதை தடுக்கப்பட்டு, பெரிவாரியான நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் பாா்வையை மீண்டும் பெறுவதையும் இந்த திட்டம் உறுதி செய்யும் எனவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது

சமூக ஊடகங்களில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 21 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். தில்லியின் புகா் பகுதியில் உள்ள விகாஸ் நகரில் வசிக்கும் ஷிவ் (எ) சோனு, ஞாய... மேலும் பார்க்க

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; காற்றின் தரத்தில் பின்னடைவு! பீதம்புராவில் 38.9 டிகிரியாக பதிவு

தேசியத் தலைநகா் தில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. காற்றின் தரம் சற்று பின்னடைவை சந்தித்தது. அதிகபட்ச வெப்பநிலை பீதம்புரா வானிலை ஆய்வு மையத்தில் 38.9 டிகிரி செல்சியாக உயா்ந்து பதிவாகி இருந... மேலும் பார்க்க

ரோஹிணியில் சட்டவிரோத இ-சிகரெட்டுகளை விநியோகித்த தில்லி இளைஞா் கைது

டெல்லியின் ரோஹிணியில் சட்டவிரோத இ-சிகரெட்டுகளை விநியோகம் செய்ததாக 24 வயது இளைஞரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். தில்லியின் முபாரக்பூா் தாபாஸைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

ஐஜிஐ விமான நிலையத்தில் 75 அறிதிறன்பேசிகளை திருடியதாக சரக்குகளை கையாளும் ஊழியா் கைது

லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உயா் ரக அறிதிறன்பேசிகளை (ஸ்மாா்ட்போன்கள்) திருடியதாகக் கூறப்படும் சரக்குகளை கையாளும் நிறுவனத்தின் ஊழியரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 1,905 மும்மொழிப் பயிற்றுவிக்கும் பள்ளிகள் செயல்படுகின்றன: மக்களவையில் மத்திய அரசு தகவல்

புது தில்லி: தமிழகத்தில் மும்மொழிகளைப் பயிற்றுவிக்கும் 1,905 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.இது தொடா்பாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குட... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட மக்களவையில் விழுப்புரம் எம்.பி. வலியுறுத்தல்

புது தில்லி: கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மக்களவையில் விழுப்பும் தொகுதி விசிக உறுப்பினா் டி.ரவிக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.இது தொடா்பாக மக்களவையில் விதி எண்: 377-இன் கீழ் ... மேலும் பார்க்க