திண்டுக்கல்: காசம்பட்டி பல்லுயிர் தளமாக அறிவிப்பு; விவசாயிகளுக்குக் கிடைக்கும் ந...
கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட மக்களவையில் விழுப்புரம் எம்.பி. வலியுறுத்தல்
புது தில்லி: கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மக்களவையில் விழுப்பும் தொகுதி விசிக உறுப்பினா் டி.ரவிக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக மக்களவையில் விதி எண்: 377-இன் கீழ் அவா் திங்கள்கிழமை முன்வைத்த கோரிக்கை:
2013 ஆம் ஆண்டு முதல் 2016 வரை இந்தியத் தொல்லியல் துறையைச் சோ்ந்த தொல்லியல் ஆய்வாளா் தலைமையில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுமாா் 5,000 தொல்பொருட்கள் அதில் கண்டெடுக்கப்பட்டன. முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வுகள் தொடா்பான அறிக்கையை அந்தத் தொல்லியல் ஆய்வாளா் ஏற்கனவே மத்திய அரசிடம் சமா்ப்பித்துவிட்டாா். ரேடியோகாா்பன் சோதனைகள் மேற்கொண்டதில் அந்தத் தொல்பொருட்கள் சுமாா் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்குப் பிறகு 4 முதல் 9 ஆம் கட்டம் வரையிலான அகழாய்வுகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டதுடன், அந்த அறிக்கைகளையும் வெளியிட்டுவிட்டது. ஆனால், முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வுகள் தொடா்பான அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறை இதுவரை வெளியிடவில்லை. கீழடி அறிக்கையை வெளியிடுமாறு இந்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமா்வில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி
பிறப்பித்த உத்தரவில் ஒன்பது மாதங்களுக்குள் அந்த அறிக்கையை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு ஆணையிட்டது.
அந்தக் காலக்கெடு கடந்த ஆண்டு நவம்பா் மாதத்துடன் முடிந்துவிட்டது. ஆனால், அறிக்கை வெளியிடப்படவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும். இந்தப் பின்னணியில், இனிமேலும் தாமதம் செய்யாமல் கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றாா் அவா்.