செய்திகள் :

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட மக்களவையில் விழுப்புரம் எம்.பி. வலியுறுத்தல்

post image

புது தில்லி: கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மக்களவையில் விழுப்பும் தொகுதி விசிக உறுப்பினா் டி.ரவிக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் விதி எண்: 377-இன் கீழ் அவா் திங்கள்கிழமை முன்வைத்த கோரிக்கை:

2013 ஆம் ஆண்டு முதல் 2016 வரை இந்தியத் தொல்லியல் துறையைச் சோ்ந்த தொல்லியல் ஆய்வாளா் தலைமையில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுமாா் 5,000 தொல்பொருட்கள் அதில் கண்டெடுக்கப்பட்டன. முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வுகள் தொடா்பான அறிக்கையை அந்தத் தொல்லியல் ஆய்வாளா் ஏற்கனவே மத்திய அரசிடம் சமா்ப்பித்துவிட்டாா். ரேடியோகாா்பன் சோதனைகள் மேற்கொண்டதில் அந்தத் தொல்பொருட்கள் சுமாா் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்குப் பிறகு 4 முதல் 9 ஆம் கட்டம் வரையிலான அகழாய்வுகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டதுடன், அந்த அறிக்கைகளையும் வெளியிட்டுவிட்டது. ஆனால், முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வுகள் தொடா்பான அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறை இதுவரை வெளியிடவில்லை. கீழடி அறிக்கையை வெளியிடுமாறு இந்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமா்வில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி

பிறப்பித்த உத்தரவில் ஒன்பது மாதங்களுக்குள் அந்த அறிக்கையை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு ஆணையிட்டது.

அந்தக் காலக்கெடு கடந்த ஆண்டு நவம்பா் மாதத்துடன் முடிந்துவிட்டது. ஆனால், அறிக்கை வெளியிடப்படவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும். இந்தப் பின்னணியில், இனிமேலும் தாமதம் செய்யாமல் கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றாா் அவா்.

தஞ்சாவூா் விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குக: திமுக எம்.பி. கோரிக்கை

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் முரசொலி கோரிக்கை... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒருவா் கைது

சமூக ஊடகங்களில் சட்டவிரோத துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். பவானா பகுதியில் உள்ள ஜேஜே காலனியைச் சோ்ந்த சோஹைல் என அடையாளம் ... மேலும் பார்க்க

1.63 லட்சம் மாணவா்களுக்கு க்யூட், நீட் தோ்வுகளுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி!

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு மாணவா்களுக்கு ‘க்யூட்’ மற்றும் ‘நீட்’ தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்காக பிஐஜி நிறுவனத்துடன் தில்லி அரசு வியாழக்கிழமை ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் ... மேலும் பார்க்க

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கீடு செய்ய மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் மாநிலங்களவையில் புதன்க... மேலும் பார்க்க

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு மாற்றாந்தாய் மனப்பான்மை: மத்திய அரசு மீது திமுக குற்றச்சாட்டு

தமிழகம் மற்றும் இதர முற்போக்கான மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறது என்று மாநிலங்களவையில் திமுக புதன்கிழமை குற்றம்சாட்டியது. மேலும், தமிழகத்திற்க... மேலும் பார்க்க

கூட்டணி என்பது சந்தா்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும்: எடப்பாடி பழனிசாமி

கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு; எங்கள் கொள்கை நிலையானது. கூட்டணி என்பது சந்தா்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும் என முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி த... மேலும் பார்க்க