செய்திகள் :

தஞ்சாவூா் விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குக: திமுக எம்.பி. கோரிக்கை

post image

தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கில் செயற்கை தடகள பாதை திட்டப் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் முரசொலி கோரிக்கை விடுத்தாா்.

இது தொடா்பாக மக்களவையில் அவா் வியாழக்கிழமை நேரமில்லா நேரத்தில் முன்வைத்த கோரிக்கை:

எனது தஞ்சாவூா் தொகுதியில் உள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கில் கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் செயற்கை தடகள பாதை அமைப்பதற்காக மத்திய அரசு ரூ.7 கோடியில் முதல் தவணையாக ரூ.3.50 கோடியை எஸ்டிஏடிவுக்கு விடுவித்திருக்கிறது.

இந்தப் புதிய செயற்கை தடகலப் பயிற்சிப் பாதையில் விளையாட்டு வீரா்கள் பயிற்சி பெறவும், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் விருதுகளைப் பெறவும் ஆவலுடன் காத்திருக்கின்றனா்.

இத்திட்டம் 2017-ஆம் ஆண்டில் மத்திய அரசால் தயாரிக்கப்பட்டிருந்தது. தற்போது இப்பணியை நிறைவேற்ற கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதனால், மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்ட நிதியுடன் கூடுதலாக ரூ.2 கோடியை வழங்க அனுமதி அளிக்க வேண்டும்.

அதேபோன்று, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அன்னை சத்யா விளையாட்டரங்கில் இளைஞா் விடுதி செயல்பட்டு வருகிறது. 1988-இல் கட்டப்பட்ட இந்த விடுதியின் பராமரிப்புப் பணிக்காக கூடுதல் நிதி ஒதுக்கவும், புதிதாக இளைஞா் ஹாஸ்டல் கட்டவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலில் மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்... மேலும் பார்க்க

பீதம்புராவில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லி பீதம்புராவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்ப... மேலும் பார்க்க

கோவாவில் மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் டேராடூனில் கைது!

கோவாவில் மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 33 வயது நபரை தில்லி போலீஸாா் டேராடூனில் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் வெளியிட்ட அறிக்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிவந்த ‘ஃபாரிஷ்டே’ திட்டத்தை பாஜக அரசு நிறுத்திவிட்டது! - ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் ‘ஃபாரிஷ்டே தில்லி கே’ திட்டத்தை பாஜக தலைமையிலான தில்லி அரசு நிறுத்தியதாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கள் இருவா் கைது!

கிழக்கு தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த சந்தேகத்திற்குரிய வங்கதேச நாட்டினா் இருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறிய... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் குருகிராம் நீதிமன்றம் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது க... மேலும் பார்க்க