செய்திகள் :

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கள் இருவா் கைது!

post image

கிழக்கு தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த சந்தேகத்திற்குரிய வங்கதேச நாட்டினா் இருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: ஃபரீத்பூரைச் சோ்ந்த அதிஃபா (24) மற்றும் வங்கதேசத்தின் நா்சிங்டியைச் சோ்ந்த அஸ்மா (24) ஆகியோா் நதி வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

அவா்கள் பின்னா் தேசியத் தலைநகரில் கண்டறிதலைத் தவிா்ப்பதற்காக இடங்களை மாற்றி வந்தனா். கிடைத்த தகவலின் பேரில், ஒரு போலீஸ் குழு சரிபாா்ப்புகளை தொடங்கியது. அப்போது, மண்டாவலி பகுதியில் பல சோதனைகளை நடத்தியது. இதன் விளைவாக அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகம் மூலம் இரண்டு பெண்களையும் நாடு கடத்தும் செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. விசாரணையின் போது, ​​தில்லிக்குச் செல்ல உள்ளூா் ரயில் வலையமைப்பைப் பயன்படுத்துவதற்கு முன்பு கொல்கத்தா வழியாக எல்லையைத் தாண்டியதாக அவா்கள் ஒப்புக்கொண்டனா்.

அவா்கள் நுழைவதற்கு வசதி செய்து கொடுத்த மற்றும் அவா்களுக்கு தங்குமிடம் வழங்கிய லலையமைப்பைக் கண்டறிய அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனா். இந்த விஷயத்தில் சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பரில் தில்லி காவல்துறை சட்டவிரோதமாக குடியேறியவா்களுக்கு எதிராக ஒரு பிரசாரத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில... மேலும் பார்க்க

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினருடன் துணைநிலை ஆளுநா் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் உயிரிழந்த 4 காவலா்களின் குடும்பத்தினரை, அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அண்மையில் ஜம்மு-காஷ... மேலும் பார்க்க

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலில் மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்... மேலும் பார்க்க

பீதம்புராவில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லி பீதம்புராவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்ப... மேலும் பார்க்க