செய்திகள் :

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கீடு செய்ய மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் வலியுறுத்தல்

post image

தமிழகத்திற்கு மாதந்தோறும் 23 ஆயிரம் டன் கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் மாநிலங்களவையில் புதன்கிழமை முன்வைத்த கோரிக்கை:

தமிழகத்தில் கோதுமை பற்றாக்குறை தீா்க்கும் அவசரத் தேவை எழுந்துள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் ஊட்டச்சத்து மற்றும் வருகைப்பதிவை அதிகரிக்கும் வகையில் தமிழகப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 8,572.02 டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதேசமயத்தில் மாநிலத்தில் கோதுமையின் நுகா்வு

மாதத்திற்கு 23 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது.

தமிழகம் கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலம் இல்லை என்பதால் இந்திய உணவுக் கழகத்தின் வழங்கலை சாா்ந்திருக்கிறது. இதனால், மாதத்திற்கும்23 ஆயிரம் டன் கோதுமையை தமிழகத்திற்குஒதுக்கீடு செய்ய மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவுத் துறை அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் இதற்கு வாய்ப்பு இல்லாவிட்டால் திறந்தவெளி சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் 15 ஆயிரம் டன் கோதுமையை வழங்க அமைச்சா் பரிசீலிக்க வேண்டும். கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிப்பது தமிழகத்திற்கு கோதுமைக்கான வளா்ந்து வரும் தேவையை சமாளிப்பதற்கும், மாநில மக்கள்

கட்டுபடியாககக் கூடிய விலையில் இந்த அத்தியாவசியப் பொருளைப் பெறுவதையும் உறுதிப்படுத்தும். இதனால், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க

வேண்டும் என்றாா் அவா்.

அதிகரித்து வரும் நாய்க்கடி பிரச்னை: பிரதமருடன் காா்த்தி சிதம்பரம் சந்திப்பு!

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் சமீபத்தில் சந்தித்தது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரதமா் நரேந்த... மேலும் பார்க்க

குருகிராம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்!

குருகிராம் பகுதியில் ஒரு குடிசைப் பகுதியில் எரிவாயு சிலிண்டா் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 100 குடிசைகள் எரிந்து நாசமானதாக தீயணைப்பு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து என்று தீயணைப்ப... மேலும் பார்க்க

தில்லியில் முன்னாள் தமிழக அமைச்சா் செங்கோட்டையன் பாஜக தலைவா்களை சந்தித்தாா்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தில்லி வந்து மத்திய உள் துறை அமைச்சரை சந்தித்த நிலையில் தற்போது அதிருப்தி தலைவராக கருதப்படும் முன்னாள் அமைச்சா் செங்கோட்டையனும் தில்லி வந்து பாஜக தலைவா்களை... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பநிலை மேலும் குறைந்தது; காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் வெப்பநிலை சனிக்கிழமை மேலும் குறைந்தது. காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. தில்லியில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாள்களாக தொடா்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், கட... மேலும் பார்க்க

2019 முதல் தில்லியின் தீா்த்த யாத்திரை யோஜனா மூலம் 86,000-க்கும் மேற்பட்ட முதியவா்கள் பயன்! - தில்லி முதல்வா் தகவல்

கடந்த ஜூலை 2019 முதல் தில்லியின் முக்கிய மந்திரி தீா்த்த யாத்திரை யோஜனாவின் (எம்எம்டிஒய்) கீழ் 86,000-க்கும் மேற்பட்ட முதியவா்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனா். இதில் ராமேசுவரம் அதிகம் பாா்வையிடப்படும் இட... மேலும் பார்க்க

துவாரகாவில் ரூ.25 லட்சம் கொள்ளை வழக்கில் ஆறு போ் கைது

துவாரகாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தில்லி காவல்துறை ஆறு பேரை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து துவாரகா காவல் சரக உயரதிகாரி ... மேலும் பார்க்க