செய்திகள் :

செவிலியர்கள் அலட்சிம்! பிறந்த குழந்தை பலி!

post image

மத்தியப் பிரதேசத்தில் சமூக மருத்துவ மையத்தில் செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை பலியான சம்பவம், பலரிடையே கண்டனங்களை எழுப்பியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து 160 கி.மீ. தொலைவில் ரத்லாம் மாவட்டத்தில் கிருஷ்ணா என்பவரின் மனைவி நீத்துவுக்கு மார்ச் 23 ஆம் தேதியில் பிரசவ வலி ஏற்பட்டதாகக் கூறி, சமூக சுகாதார மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், நீத்துவுக்கு பேறு காலம் இன்னும் 2 நாள்கள் இருப்பதாகக் கூறி, அவர்களை செவிலியர்கள் இருவர் திருப்பி அனுப்பி விட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் அதிகாலை 1 மணியளவில் பிரசவ வலி வந்ததையடுத்து, மீண்டும் சமூக சுகாதார மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த முறையும், அவருக்கு குழந்தை பிறக்க 15 மணி நேரம்வரையில் இருப்பதாகக் கூறி, திருப்பி அனுப்பி விட்டனர்.

இந்த நிலையில், சுமார் 2 மணிநேரத்தில் நீத்துவுக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால், அவரை அழைத்துச் செல்ல வாகனங்கள் ஏதும் கிடைக்காததால், அவரை கிருஷ்ணா தள்ளுவண்டியில் அழைத்து சென்றார்.

இதனிடையே, செல்லும் வழியிலேயே குழந்தையின் கால்கள் வெளியே வந்த நிலையில், மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டபோது, குழந்தை முழுவதுமாக வெளியே எடுக்கப்பட்டது. இருப்பினும், குழந்தை உயிரிழந்து விட்டது.

மகப்பேறுக்காக நீத்துவை தள்ளுவண்டியில் கிருஷ்ணா அழைத்துச் செல்லும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, மருத்துவ மையத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினரிடையே கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி, மருத்துவ மையத்தின் மீது நீத்து புகார் அளித்தார். இதனையடுத்து, செவிலியர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், பணியில் இருந்த மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி, கடிதம் அனுப்பப்பட்டது.

இதையும் படிக்க:ஏடிஎம் கட்டண உயர்வுக்கு முதல்வர் கண்டனம்!

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க

ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

மும்பை: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் முதன்மையானதாக அறியப்படும் இஸ்கான் பிவாண்டி கோயிலில் வரவிருக்கும் ராம நவமி விழாவைக் கொண்டாடச் சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது .இந்தாண்டு ஏப்ரல் 6-ம் தேதி ராம ... மேலும் பார்க்க

பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!

பாஜக தேசிய தலைவர் தேர்வு தொடர்பாக மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடையே காரசார வாதம் நிகழ்ந்தது.மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா ... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க