செய்திகள் :

அம்பாசமுத்திரம் அருகே 10 நாளாக வனத்துறைக்கு போக்கு காட்டிய கரடி பிடிபட்டது!

post image

அம்பாசமுத்திரம் அருகே கடந்த 10 நாள்களாக வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த கரடி கூண்டில் சிக்கியது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொன்மா நகர், நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரடி நடமாட்டம் அதிகரித்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோயில்கள், குடியிருப்புகளில் சுற்றித் திரிந்த கரடியை பிடிக்க கடந்த 20ஆம் தேதி கூண்டு வைக்கப்பட்டது.

கரடியைப் பிடிப்பதற்கு கூண்டில் பலாப்பழம், வாழைப்பழம், அன்னாச்சி பழம், நெய், தேன், உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டன. கடந்த 10 நாள்களாக கூண்டில் சிக்காமல் வனத்துறைக்கு போக்கு காட்டி கரடியானது அந்த பகுதியில் சுற்றித் திரிந்துள்ளது. இதனால் கரடியைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் .

இந்த நிலையில் வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரடியானது அதற்காக வைக்கப்பட்ட கூண்டில் வசமாக சிக்கியது.

செவிலியர்கள் அலட்சிம்! பிறந்த குழந்தை பலி!

தகவல்அறிந்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா சம்பவ இடத்திற்கு சென்று கூண்டில் சிக்கிய கரடியை ஆய்வு மேற்கொண்டார் .

தொடர்ந்து, ஆக்ரோஷமாக இருந்த கரடிக்கு பத்துக்கும் மேற்பட்ட வனத்துறை குழுவினர் மயக்க ஊசி செலுத்தினர்.

கரடி முழுமையாக மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் காரையாறு அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே கரடி ஏற்றிச் சென்ற வாகனத்தின் முன்பு கோயில் பூசாரி, சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபாடு மேற்கொண்டு வழி அனுப்பி வைத்தார்.

தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும்: பேரவையில் காரசாரம்

தமிழகத்தின் தலைநகரை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரை சென்னைக்கு மாற்ற வேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை வைத்ததால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.தமிழ... மேலும் பார்க்க

நீலகிரி செல்வோர் கவனத்துக்கு... திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!

நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு இன்று(ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில், இ-பாஸ் பெறாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.நீலகிரியில் அளவுக்கு அதிகமான வாகனங்... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

சென்னை: தமிழகத்தின் பெருமைமிகு வேளாண் உற்பத்திப் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட ப... மேலும் பார்க்க

திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர்: முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் புதிதாக அமையவுள்ள நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும் பார்க்க

குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு!

குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை: அமைச்சர் துரைமுருகன்

பெரம்பலூர் மாவட்டம் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணைக் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.சனி, ஞாயிறு மற்றும் ரமலான் பண்டிகையால் திங்கள்கிழமை... மேலும் பார்க்க