செய்திகள் :

Malaysia Fire Accident : மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து பெரும் தீ விபத்து | Shocking Video

post image

​மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் நிறுவனத்தின் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தீ விபத்தான பெட்ரோனாஸ் நிறுவனம், "இன்று காலை 8.10 மணியளவில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது" என்று கூறியிருக்கிறது.

தகவல் அறிந்த உடனே தீயணைப்புத் துறை தீவிரமாக மீட்புப் பணியில் இறங்கி இருக்கிறார்கள். தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த தீ விபத்தில் இதுவரை 12பேர் தீ காயமைடந்துள்ளதாகவும், 82பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெரும் தீவிபத்து என்பதால் அருகிலுள்ள வீடுகளும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கின்றன. அப்பகுதியைச் சுற்றி இருக்கும் மக்களை பாதுக்காப்பான இடங்களுக்கு மாற்றி வருகின்றனர்.

Malaysia Fire Accident

தீ விபத்தடைந்த தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் நிறுவனத்தின் எரிவாயு குழாய்களை எச்சரிக்கப் பகுதியாகத் தனிமைப்படுத்தி, அப்பகுதியில் இருக்கும் மூன்று எரிபொருள் நிலையங்களையும் முன்னெச்சரிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையுடன் அப்பகுதி முழுவதையும் காவல்துறை கட்டுப்பாட்டில் எடுத்து, மீட்புப் பணியில் இறங்கியிருக்கிறது.

இந்நிலையில் வானத்தை நோக்கி வெடித்துச் சிதறும் எரிவாயு குழாயின் தீ விபத்துக் காணொலி சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஒடிஸா அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் ரயில்.. மீட்புப் பணிகள் துரிதம் - என்ன நடந்தது?

இன்று பெங்களூருவில் இருந்து சென்ற ரயில் ஒன்று ஒடிசா மாநிலம் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இது பெங்களூருவில் இருந்து குவாஹாத்தி செல்லும் காமக்யா விரைவு ரயில் ஆகும். விபத்திற்கு காரணம் என்ன?... மேலும் பார்க்க

ஐஸ்வர்யா ராய் காரில் மோதிய பஸ்.. அமிதாப்பச்சன் வீட்டுக்கு அருகே விபத்து; என்ன நடந்தது?

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இப்போது படங்களில் நடிக்காமல் மகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்ல... மேலும் பார்க்க

Coonoor: குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் தீ விபத்து; நள்ளிரவில் கடைகள் எரிந்து சேதம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரின் மையப்பகுதியில் நகராட்சி நிர்வாகத்திற்குச் சொந்தமான ஒருங்கிணைந்த சந்தை செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்த சந்தையில் உள்ள கடைகளை வணிகர்கள் மாத வாடகை செலு... மேலும் பார்க்க

பெங்களூருவில் 100 அடி தேர் சரிந்து விழுந்து இருவர் பலி - விபத்துக்கு காரணம் என்ன?

பெங்களூரு ஆனேகலில் உள்ள மதுரம்மா கோவிலில் நேற்று தேர் திருவிழா நடந்துள்ளது. இந்தத் தேரின் உயரம் கிட்டதட்ட 100 அடி ஆகும். நேற்று மாலை சுமார் 6 மணியளவில், இந்த தேர்கள் வீதிகளில் வலம் வந்துகொண்டிருந்தப் ... மேலும் பார்க்க

Ooty: ``குதறிய நிலையில் பெண் சடலம்..'' - புலியா? சிறுத்தையா? குழப்பத்தில் வனத்துறை! என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் தொட்டபெட்டா மலைச்சரிவில் அமைந்திருக்கிறது காலி பெட்டா பகுதி. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இந்த பகுதியில் நேற்று முன்தினம் காலை தேயிலை பறிக்கச் சென்ற அஞ்சலை என்கிற 50 வயது ப... மேலும் பார்க்க

மழைக்கு மரத்தடியில் ஒதுங்கியவர்கள் மீது மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு; உளுந்தூர்பேட்டையில் சோகம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்து வருகிறது.இந்நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் (72) மற்றும்... மேலும் பார்க்க