செய்திகள் :

ஐஸ்வர்யா ராய் காரில் மோதிய பஸ்.. அமிதாப்பச்சன் வீட்டுக்கு அருகே விபத்து; என்ன நடந்தது?

post image

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இப்போது படங்களில் நடிக்காமல் மகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

கணவர் அபிஷேக் பச்சனுடன் கருத்து வேறுபாட்டில் இருந்த ஐஸ்வர்யா ராய் இப்போது பொதுநிகழ்ச்சிகளில் கணவருடன் சேர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.

மும்பையில் நேற்று ஐஸ்வர்யா ராய்க்கு சொந்தமான காரை அதன் டிரைவர் அந்தேரி ஜுகு பகுதியில் நடிகர் அமிதாப்பச்சன் வீட்டிற்கு அருகில் ஓட்டிச்சென்றபோது அதன் மீது பெஸ்ட் பஸ் மோதிக்கொண்டது.

காரின் பின்புறமாக பஸ் இடித்துக்கொண்டது. அந்நேரம் காரில் ஐஸ்வர்யா ராய் இல்லை. விபத்து நடந்தவுடன் பஸ் டிரைவர் பஸ்சில் இருந்து இறங்கி வந்து காரில் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட்டார்.

டிரைவரை தாக்கிய பவுன்ஷர்

அந்நேரம் அருகில் உள்ள பங்களாவில் இருந்த செக்யூரிட்டி கார்டு வந்து பஸ் டிரைவரை திட்டி தாக்கியுள்ளார். காருக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. பஸ் டிரைவரை அடித்த பவுன்ஷர் எனப்படும் செக்யூரிட்டி கார்டு அமிதாப்பச்சன் வீட்டில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய்

பஸ் டிரைவர் உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் சம்பவ இடத்திற்கு வரும் முன்பு செக்யூரிட்டி கார்டு வேலை செய்த பங்களாவை சேர்ந்த சூப்பர்வைசர் வந்து பஸ் டிரைவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து இப்பிரச்னையை மேற்கொண்டு பெரிதாக்கவேண்டாம் என்று கருதி அடித்த செக்யூரிட்டி கார்டு மீது பஸ் டிரைவர் போலீஸில் புகார் செய்யவில்லை. பஸ் செல்ல வேண்டிய இடத்திற்கு புறப்பட்டுச் சென்றது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Coonoor: குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் தீ விபத்து; நள்ளிரவில் கடைகள் எரிந்து சேதம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரின் மையப்பகுதியில் நகராட்சி நிர்வாகத்திற்குச் சொந்தமான ஒருங்கிணைந்த சந்தை செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்த சந்தையில் உள்ள கடைகளை வணிகர்கள் மாத வாடகை செலு... மேலும் பார்க்க

பெங்களூருவில் 100 அடி தேர் சரிந்து விழுந்து இருவர் பலி - விபத்துக்கு காரணம் என்ன?

பெங்களூரு ஆனேகலில் உள்ள மதுரம்மா கோவிலில் நேற்று தேர் திருவிழா நடந்துள்ளது. இந்தத் தேரின் உயரம் கிட்டதட்ட 100 அடி ஆகும். நேற்று மாலை சுமார் 6 மணியளவில், இந்த தேர்கள் வீதிகளில் வலம் வந்துகொண்டிருந்தப் ... மேலும் பார்க்க

Ooty: ``குதறிய நிலையில் பெண் சடலம்..'' - புலியா? சிறுத்தையா? குழப்பத்தில் வனத்துறை! என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் தொட்டபெட்டா மலைச்சரிவில் அமைந்திருக்கிறது காலி பெட்டா பகுதி. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இந்த பகுதியில் நேற்று முன்தினம் காலை தேயிலை பறிக்கச் சென்ற அஞ்சலை என்கிற 50 வயது ப... மேலும் பார்க்க

மழைக்கு மரத்தடியில் ஒதுங்கியவர்கள் மீது மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு; உளுந்தூர்பேட்டையில் சோகம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்து வருகிறது.இந்நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் (72) மற்றும்... மேலும் பார்க்க

தர்மேந்திர பிரதான் உருவபொம்மை எரிப்பு; வேட்டியில் பற்றிய தீ... திமுக போராட்டத்தில் பரபரப்பு

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் இரண்டாவது அமர்வு தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டுக்கு கல்விநிதி தொடர்பாக தமிழக எம்பிக்கள் கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் த... மேலும் பார்க்க

Mumbai: பாதுகாப்புக் கசவமின்றி தண்ணீர்த் தொட்டிக்குள் இறக்கப்பட்ட தொழிலாளர்கள்; விஷவாயு தாக்கி பலி

மும்பையின் தென் பகுதியில் உள்ள நாக்பாடாவில் 40 மாடிக்கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே 30 மாடிகள் கட்டப்பட்டுவிட்டது. இக்கட்டிடத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர்த் தொட்டி ஒன்று கட்டப்பட்டு இரு... மேலும் பார்க்க