செய்திகள் :

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 7 பேர் காயம்

post image

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒடிசா மாநிலம், மங்குலி அருகே நிர்குன்டியில் பெங்களூரு-காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் ஞாயிற்க்கிழமை காலை 11.54 மணியளவில் தடம் புரண்டது. இந்த ரயில் பெங்களூருவிலிருந்து அசாமின் குவஹாத்தியில் உள்ள காமாக்யா நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது.

விபத்தைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ஒடிசா தீயணைப்புப் படை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. மேலும் சம்பவ இடத்திற்கு நிவாரண ரயிலும் விரைந்தது. இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஒடிசா தீயணைப்பு சேவை இயக்குநர் சுதன்சு சாரங்கி தெரிவித்தார்.

இதுகுறித்து கிழக்கு கடற்கரை ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி அசோக் குமார் மிஸ்ரா கூறுகையில், பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் இடங்களுக்குச் செல்ல உதவும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் பாதையை சீரமைப்பதே எங்கள் முன்னுரிமை, அதன்படி, மற்ற ரயில்கள் திருப்பி விடப்படும் என்றார்.

ரயில் தடம் புரண்டதால் அவ்வழியாகச் செல்லும் தௌலி எக்ஸ்பிரஸ், நீலாச்சல் எக்ஸ்பிரஸ் மற்றும் புருலியா எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று ரயில்கள் திருப்பி விடப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விபத்து தொடர்பாக விபரங்கள் அறிய 8455885999 மற்றும் 8991124238 ஆகிய உதவி எண்களும் ரயில்வேயால் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

தாணேவில் தடை செய்யப்பட்ட 238 இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்

தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு கசிவு: 3 பேர் பலி! பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானிலுள்ள ஒரு தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு கசிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பேவார் மாவட்டத்திலுள்ள பாடியா பகுதியில் அமைந்துள்ள ஒரு வேதிப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிரு... மேலும் பார்க்க

விமான நிலையம் செல்லும் வழியில் ஜெர்மன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!

ஹைதராபாத்தில் விமான நிலையம் செல்லும் வழியில் ஜெர்மன் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். ஜெர்மனைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் ஹைதராபாத் நகரத்திற்கு சுற்றுலா வந்திருந்தார். தனது நண்பர்க... மேலும் பார்க்க

இன்றுமுதல் வருமான வரி மாற்றங்கள் அமல்: தெரிந்துகொள்ள வேண்டியவை!

2025-2026 நிதியாண்டின் முதல்நாளான இன்று(ஏப்ரல் 1) முதல், புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் வருமான வரிச் சட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பல மாற்றங்கள் அமலாகின்றன. முக்கியமாக, ரூ. 12 லட்சம் வரை ஆண்ட... மேலும் பார்க்க

கண்ணி வெடிகளால் சூழப்பட்ட ஜார்க்கண்ட் காடுகள்!

ஜார்க்கண்ட் காடுகளில் மாவோயிஸ்டுகள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அவர்கள் வைத்த கண்ணி வெடிகள் பாதுகாப்புப் படையினருக்கு சவாலை ஏற்படுத்துகின்றன. பாதுகாப்புப் படையினர் காடுகளுக்குள் வந்து தங்களைக் கைது ... மேலும் பார்க்க

2026 மார்ச் 31-க்குள் நக்சல் இயக்கம் வேரோடு அழிக்கப்படும்: அமித் ஷா

2026 மார்ச் 31-க்குள் நக்சல் இயக்கம் வேரோடு அழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமித் ஷா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “நக்சல் இல்லா பாரதத்தை கட்டியெழுப்ப... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த எம்புரான் சர்ச்சை: மக்களவை ஒத்திவைப்பு!

மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைத்து அவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.நாடாளுமன்ற இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மூ... மேலும் பார்க்க