செய்திகள் :

இன்றுமுதல் வருமான வரி மாற்றங்கள் அமல்: தெரிந்துகொள்ள வேண்டியவை!

post image

2025-2026 நிதியாண்டின் முதல்நாளான இன்று(ஏப்ரல் 1) முதல், புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் வருமான வரிச் சட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பல மாற்றங்கள் அமலாகின்றன.

முக்கியமாக, ரூ. 12 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறும் தனிநபர்கள், இனி வருமான வரி செலுத்த தேவையில்லை. முன்னர், மேற்கண்ட வருமான வரி உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக இருந்த நிலையில், இந்த நிதியாண்டிலிருந்து வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளாதல் நடுத்தர வர்க்கத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அத்துடன் வரிக் கழிவாக ரூ. 75,000 வருமானம் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்தமாக ரூ. 12,75,000 வரை ஆண்டு வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்த தேவையில்லை.

ஆனால், இதற்காக தனிநபர்கள் புதிய வருமான வரி விதிப்பு நடைமுறைக்கு மாற வேண்டும். பிரத்யேகமாக ஐடிஆர் படிவத்தை நிரப்பி வருமான வரி சட்டப்பிரிவு 87ஏ-இன் கீழ் வரி விலக்கு பெற விண்ணப்பிக்க வேண்டும்.

ரூ. 24 லட்சம் அல்லது அதற்கும் மேல் வருமானம் பெறுவோர் வருமான வரிவிதிப்பில் உச்சபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி, வருமானத்தில் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.

மேலும், ரூ.12 லட்சத்துக்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் தனிநபா்களுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில், வருமான வரி படிநிலைகள் மற்றும் விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரூ. 4 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது. தற்போது இந்த வரம்பு ரூ.3 லட்சமாக உள்ளது.

மேற்கண்ட அறிவிப்புகளை 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க

ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

மும்பை: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் முதன்மையானதாக அறியப்படும் இஸ்கான் பிவாண்டி கோயிலில் வரவிருக்கும் ராம நவமி விழாவைக் கொண்டாடச் சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது .இந்தாண்டு ஏப்ரல் 6-ம் தேதி ராம ... மேலும் பார்க்க

பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!

பாஜக தேசிய தலைவர் தேர்வு தொடர்பாக மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடையே காரசார வாதம் நிகழ்ந்தது.மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா ... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க

மணிப்பூரில் அகதிகள் பிரச்னையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: பிரேன் சிங்

1960 முதல் ஆயிரக்கணக்கான அகதிகள் மணிப்பூரில் குடியேறியுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாநில முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூரின் பாஜ... மேலும் பார்க்க