செய்திகள் :

Ooty: ``குதறிய நிலையில் பெண் சடலம்..'' - புலியா? சிறுத்தையா? குழப்பத்தில் வனத்துறை! என்ன நடந்தது?

post image

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் தொட்டபெட்டா மலைச்சரிவில் அமைந்திருக்கிறது காலி பெட்டா பகுதி. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இந்த பகுதியில் நேற்று முன்தினம் காலை தேயிலை பறிக்கச் சென்ற அஞ்சலை என்கிற 50 வயது பெண் தொழிலாளி திடீரென மாயமாகியுள்ளார். இரவு வரை பல பகுதிகளிலும் தேடியும் கண்டறிய முடியாததால் உறவினர்கள் வேதனையில் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில், காலி பெட்டா பகுதியில், பெண் சடலம் ஒன்று சிதைந்த நிலையில் கிடப்பதைக் கண்டு பதறிய உள்ளுர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

வனவிலங்கு தாக்குதல்

காவல்துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதில் வனவிலங்கு தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் கள ஆய்வு மேற்கொண்டதில் வனவிலங்கு தாக்கி கொன்று, அவரின் உடல் பாகங்களையும் தின்றிருப்பதை உறுதி செய்துள்ளனர். அஞ்சலையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர், குறிப்பிட்ட அந்த வனவிலங்கின் நடமாட்டம் குறித்து அறிவியல் பூர்வ தடயங்களை சேகரிக்கும் முனைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த துயரம் குறித்து பகிர்ந்த வனத்துறை, " தொட்டபெட்டா வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. வனத்தை விட்டு வெளியேறிய புலி அல்லது சிறுத்தை இவை இரண்டில் ஏதோவொரு உயிரினம் அந்த பெண்மணியைத் தாக்கிக் கொன்று உடலை தின்றுள்ளது. தோட்டத்தில் குதறிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு கூராய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சடலம் கிடந்த பகுதியில் வனவிலங்கின் கால்தடம், ரோமம் போன்றவற்றை சேகரித்து வருகிறோம்.

உயிரிழந்த பெண் அஞ்சலை

10 தானியங்கி கண்காணிப்பு கேமராக்களைப் பொறுத்தி கண்காணித்து வருகிறோம். புலியா? சிறுத்தையா? என்ற குழப்பம் நீடிக்கிறது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உண்மை கண்டறியப்படும். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக இழப்பீடு நிதி வழங்கப்பட்டுள்ளது. வனப்பணியாளர்களும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்றனர்.

மழைக்கு மரத்தடியில் ஒதுங்கியவர்கள் மீது மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு; உளுந்தூர்பேட்டையில் சோகம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்து வருகிறது.இந்நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் (72) மற்றும்... மேலும் பார்க்க

தர்மேந்திர பிரதான் உருவபொம்மை எரிப்பு; வேட்டியில் பற்றிய தீ... திமுக போராட்டத்தில் பரபரப்பு

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் இரண்டாவது அமர்வு தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டுக்கு கல்விநிதி தொடர்பாக தமிழக எம்பிக்கள் கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் த... மேலும் பார்க்க

Mumbai: பாதுகாப்புக் கசவமின்றி தண்ணீர்த் தொட்டிக்குள் இறக்கப்பட்ட தொழிலாளர்கள்; விஷவாயு தாக்கி பலி

மும்பையின் தென் பகுதியில் உள்ள நாக்பாடாவில் 40 மாடிக்கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே 30 மாடிகள் கட்டப்பட்டுவிட்டது. இக்கட்டிடத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர்த் தொட்டி ஒன்று கட்டப்பட்டு இரு... மேலும் பார்க்க

கூடலூர்: அடுத்தடுத்து கவிழ்ந்த பேருந்துகள்; அதிர்ஷ்டவசமாகத் தப்பிய உயிர்கள்; பின்னணி என்ன?

கூடலூரில் நேற்று ஒரே நாளில் இரு வேறு பகுதிகளில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து ஊட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் பேருந்து ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: அரசுப் பள்ளி மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளியில், 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 2022-23-ம் நிதியாண்டில், வாணியம்பாடி தொகுதி எ... மேலும் பார்க்க

South Korea: திடீரென சரிந்து விழுந்த பாலம்; 4 பேர் பலி; 5 பேர் படுகாயம்! -பதறவைக்கும் வீடியோ காட்சி

தென் கொரியாவில் கட்டுமானப் பணியின்போது பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு சீனர்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.தென் கொரிய தலைநகருக்கு அருகே இருக்கும் நகரம் அன்சியோங்கில். இங்கு பாலம் கட்டும் பணி நடைப... மேலும் பார்க்க