செய்திகள் :

திருப்பத்தூர்: அரசுப் பள்ளி மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்!

post image

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளியில், 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 2022-23-ம் நிதியாண்டில், வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ நிதியில் ரூ.21 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல், வகுப்பறையின் மேற்கூரை சிமென்ட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது! அதில் ஒன்றாம் வகுப்பு மாணவர் பிரனீத் தலையில் காயம் ஏற்பட்டது. அதேபோல மூன்றாம் வகுப்பு மாணவர்கள் விவேக், சுதர்சன் ஆகியோரும் லேசான காயமடைந்தனர். மாணவர்கள் அலறிக்கொண்டு வெளியே ஓடி உயிர்பிழைத்தனர்.

சம்பவம் நடந்ததும், நாட்றம்பள்ளி ஒன்றிய பி.டி.ஓ விநாயகம், அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். "திறக்கப்பட்ட முதல் 6 மாதங்களிலேயே கட்டடம் பிளவுபட்டு விழுந்தால், எதிர்காலத்தில் இந்தக் கட்டடத்தின் தரம் குறித்து அச்சப்பட வேண்டியிருக்கிறது" என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.

மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவத்தில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அந்தப் பள்ளிக் கட்டடத்தின் தரம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.

Mumbai: பாதுகாப்புக் கசவமின்றி தண்ணீர்த் தொட்டிக்குள் இறக்கப்பட்ட தொழிலாளர்கள்; விஷவாயு தாக்கி பலி

மும்பையின் தென் பகுதியில் உள்ள நாக்பாடாவில் 40 மாடிக்கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே 30 மாடிகள் கட்டப்பட்டுவிட்டது. இக்கட்டிடத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர்த் தொட்டி ஒன்று கட்டப்பட்டு இரு... மேலும் பார்க்க

கூடலூர்: அடுத்தடுத்து கவிழ்ந்த பேருந்துகள்; அதிர்ஷ்டவசமாகத் தப்பிய உயிர்கள்; பின்னணி என்ன?

கூடலூரில் நேற்று ஒரே நாளில் இரு வேறு பகுதிகளில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பயணிகள் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து ஊட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் பேருந்து ... மேலும் பார்க்க

South Korea: திடீரென சரிந்து விழுந்த பாலம்; 4 பேர் பலி; 5 பேர் படுகாயம்! -பதறவைக்கும் வீடியோ காட்சி

தென் கொரியாவில் கட்டுமானப் பணியின்போது பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு சீனர்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.தென் கொரிய தலைநகருக்கு அருகே இருக்கும் நகரம் அன்சியோங்கில். இங்கு பாலம் கட்டும் பணி நடைப... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: எலி ஸ்பிரேயை முகத்தில் அடித்து விளையாடியதால் விபரீதம்... மருத்துவமனையில் 4 சிறுவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்தவர் ராமராசு. இவரது மகன் ரிசிகேஷ் (வயது-6). அதே பகுதியைச் சேர்ந்தவர்களான பழனிச்சாமி மகன் ரித்திக் (6), வீரப்பன் மகன் கருப்பசாமி (5... மேலும் பார்க்க

சிவகங்கை: மேடையில் ஆடும்போதே உயிரிழந்த நடனக் கலைஞர்; புத்தகத் திருவிழாவில் நடந்த சோகம்

சிவகங்கை மன்னர் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழா பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.புத்தகத் திருவிழாவுக்கு வருகின்றவர்களை ஈர்க்கும் வகையில் அங்கு அமைக்கப்பட்டு... மேலும் பார்க்க

Ooty: கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த தாய்; சடலமாய் குழந்தைகள்; ஊட்டியை உலுக்கிய துயரம்; நடந்தது என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள நடுவட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ்- ஷாலினி தம்பதி. இவர்களுக்கு நித்தீஷ் என்கிற 5 வயது ஆண் குழந்தையும், பிரிநிதா என்கிற 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலை... மேலும் பார்க்க