செய்திகள் :

இனப்பெருக்கத்திற்குப் பிறகு பெண் ஆக்டோபஸ்கள் இறந்துவிடுமா? - octopus குறித்த ஆச்சர்ய தகவல்கள்!

post image

ஜுராசிக் காலத்தின் பிற்பகுதியில் இருந்து ஆக்டோபஸ்கள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. கடலின் ஆழத்தில் உள்ள பவளப்பாறைகளில் வாழ்ந்து வருகின்றன.

ஆழ்கடலில் இருக்கும் ஆக்டோபஸ்கள் குறித்த ஆச்சர்ய தகவல்களை தெரிந்துகொள்வோம்.

ஆக்டோபஸ் முதுகெலும்பில்லாத உயிரினங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. ஆக்டோபஸின் ரத்தம் நீல நிறத்தில் இருக்குமாம்.

இந்த உயிரினங்கள் தங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல தாமிரம் கொண்ட ஹீமோசயனின் புரதத்தை நம்பியிருப்பதால் நீல ரத்தத்தைக் கொண்டுள்ளன.

ரத்தத்தில் உள்ள ஹீமோசயனின் உண்மையில் நிறமற்றது தான், என்றாலும் அதில் தாமிரம் இருப்பதால், அது ஆக்ஸிஜனுடன் பிணைக்கும்போது நீல நிறமாக மாறும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஆக்டோபஸ்களில் மூன்று இதயங்கள் காணப்படுகின்றன. இரண்டு செவுள்களுக்கு ரத்தத்தை செலுத்துகின்றன, மூன்றாவது இதயம் உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச்செல்கிறது.

நீந்தும்போது அவற்றின் முக்கிய இதயம் துடிப்பதை நிறுத்துகிறது, அதனால் தான் அவை அடிக்கடி ஊர்ந்து செல்லுமாம்.

ஆக்டோபஸ்கள் புத்திசாலித்தன திறனுக்காக பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் ஆக்டோபஸ்களால் தனிப்பட்ட மனிதர்களைக்கூட அடையாளம் காண முடியுமாம்.

மேலும் ஆச்சர்யமான தகவல் என்னவென்றால், இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண் ஆக்டோபஸ்கள் இறப்பதுதான்! பெண் ஆக்டோபஸ்கள் இனச்சேர்க்கைக்குப் பிறகு தங்கள் முட்டைகளைப் பாதுகாப்பதில் தங்கள் கடைசி நாள்களைக் கழிக்கின்றன, அதன் பின்னர் இறந்துவிடுமாம்.

பெண் ஆக்டோபஸ்கள் முட்டையிட்ட பிறகு ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் கடுமையான மாற்றம், அவை தங்களைத் தாங்களே சிதைத்துக் கொண்டு இறக்கச் செய்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

முட்டைகளை இட்ட பிறகு, தாய் ஆக்டோபஸ்கள் சாப்பிடுவதை நிறுத்திவிடும் என்று சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உட்பட பலர் விளக்குகின்றனர்.

குடியாத்தம்: தேனீக்கள் கொட்டி ஒருவர் மரணம்; 12 பேருக்கு தீவிர சிகிச்சை... என்ன நடந்தது?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்துள்ள சின்ன பரவக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பால மூர்த்தி மகன் செந்தில்குமார் (40). இவர், பெங்களூரில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி ஏரியாவில் வெல்டிங் கடை நடத்தி வந்தார்... மேலும் பார்க்க

தேனி: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் கூட்டமாக வலம் வரும் காட்டு மாடுகள் - அச்சத்தில் விவசாயிகள்!

கோடைகாலம் தொடங்கிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் மரங்கள் கொளுத்தும் வெயிலுக்கு கருகிவருகின்றன. மேலும் காட்டுத்தீ ஏற்பட்டு வனப்பகுதியில் தீ பரவத் தொடங்கியிருக்கிறது. இதனால் வெப்பம் காரமணாகவும், தண்... மேலும் பார்க்க

Penguin Divorce: பென்குயின் விவாகரத்து... `காலத்தோடு ஓடவேண்டிய ஓட்டப்பந்தயம் இது' | Explainer

குள்ளமான உருவத்தில், இரண்டு சிறிய கால்களை முன்னும்பின்னும் அடியெடுத்து வைத்து, அந்த அடிக்கு ஏற்றவாறு தலையை இங்கும் அங்கும் அசைத்து, இரண்டு இறக்கைகளையும் விரித்தவாரு நடக்கும் பென்குயின்களை யாருக்குத்தா... மேலும் பார்க்க

Beavers: அணைக்கட்டிய எலிகள்... எந்த நாட்டில் தெரியுமா?

ஐரோப்பாவில் உள்ள செக் குடியரசில், அரசு ஒர் அணை கட்டத் திட்டமிட்டிருக்கிறது. ஆனால், அதற்கான உரிய அனுமதி 7 ஆண்டுகளாக கிடைக்கவில்லையாம். ’நீங்க என்ன அணை கட்டுறது; நான் கட்டுறேன் பாருங்கடா’ என்கிற ரேஞ்சில... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: தொடர்ந்து இறந்த நிலையில் கரை ஒதுங்கும் கடல் ஆமைகள்... காரணம் என்ன?

உலகப் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி வருகிறது. அதில் குறிப்பாக 10 கிலோ முதல் 100 கிலோ எடை கொண்ட மீன... மேலும் பார்க்க

வயநாடு: புலியைத் தொடர்ந்து யானை, முழு கடையடைப்பிற்கு அழைப்பு! - என்ன நடக்கிறது?

வனங்கள் அடர்ந்த கேரள மாநிலத்தின் வயநாட்டில் பல ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப் பணிகளின் காரணமாக வனப்பகுதிகள் துண்டுபட்டு கிடக்கின்றன. வனவிலங்குகளின் வாழிடங்கள் மற்றும் வழித்தட... மேலும் பார்க்க