செய்திகள் :

தலைமை நிர்வாக அதிகாரி பதவி நீட்டிப்புக்குப் பிறகு இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் 4% சரிவு!

post image

புதுதில்லி: இண்டஸ்இண்ட் வங்கியின் தலைமை செயல் அதிகாரியின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகளுக்குப் பதிலாக, ஒரு வருடமாக நீட்டிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்ததை அடுத்து, இந்துஸ்இண்ட் வங்கியின் பங்குகள் 4 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தது.

இண்டஸ்இண்ட் வங்கியின் பங்கு தொடர்ந்து நான்காவது அமர்வாக 3.86 சதவிகிதம் சரிந்து ரூ.900.60 ஆக முடிவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையில் இது 3.71 சதவிகிதம் சரிந்து ரூ.901.95 ஆக முடிவடைந்தது.

இந்த அமர்வின் போது, பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவிகிதம் சரிந்து அதன் 52 வார குறைந்த விலையான ரூ.886.40 ஆக மும்பை பங்குச் சந்தையிலும் மற்றும் என்எஸ்இ-யில் ரூ.881.10 ஆக முடிந்தது.

அளவின் அடிப்படையில், இண்டஸ்இண்ட் வங்கியின் 1.60 கோடி பங்குகள் என்எஸ்இ-யில் வர்த்தகம் ஆன நிலையில், 4.49 லட்சம் பங்குகள் பிஎஸ்இ-யில் கைமாறியுள்ளது.

சுமந்த் கத்பாலியாவை 2025 மார்ச் 24 முதல் 2026 மார்ச் 23 வரை ஒரு வருட காலத்திற்கு வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக மீண்டும் நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக இண்டஸ்இண்ட் வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

வாரியம் முன்மொழிந்ததை விட குறுகிய காலத்திற்கு மத்திய வங்கி ஒப்புதல் அளிப்பது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு செப்டம்பரில், இண்டஸ்இண்ட் வங்கியின் இயக்குநர் குழு கத்பாலியாவுக்கு மூன்று ஆண்டுகள் மறுநியமனம் செய்ய பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: உயர்ந்து முடிந்த சன் பார்மா பங்குகள்!

உயர்ந்து முடிந்த சன் பார்மா பங்குகள்!

புதுதில்லி: அமெரிக்காவைச் சேர்ந்த, 'செக்பாயிண்ட் தெரபியூடிக்ஸ்' நிறுவனத்தை, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 355 கோடி டாலருக்கு வாங்க உள்ளதாக அறிவித்தையடுத்து அதன் பங்கின் விலை 0.13% உயர்ந்த... மேலும் பார்க்க

இந்திய ரூபாயின் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ.87.33-ஆக முடிவு!

மும்பை: உலகெங்கிலும் நிச்சயமற்ற கட்டண தன்மைக்கு மத்தியில் நிலையற்ற கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நிய நிதியின் தடையற்ற வெளியேற்றம் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 பைசா குறை... மேலும் பார்க்க

நிலையற்ற வர்த்தகத்தின் மத்தியில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

மும்பை: ஆசிய பங்குச் சந்தைகளின் ஏற்றத்தின் எதிரொலியாக, இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 324.67 புள்ளிகள் உயர்ந்தும், நிஃப்டி 98.45 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது. இந்த போக்கு தொடருமா என்று மு... மேலும் பார்க்க

தங்கம் விலை சற்று உயர்வு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.கடந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து, ரூ. 64,320-க்கு விற்பனை... மேலும் பார்க்க

டிரம்ப் நிர்வாகத்தில் பொறுப்பேற்றதுமுதல் சரியும் எலான் மஸ்க்!

அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு 7வது வாரமாகத் தொடர்ந்து சரிந்துள்ளது. டெஸ்லாவின் மதிப்பு கடந்த வாரத்தில் 10% சரிந்த நிலையில், இதுவரை 800 பில்லியன் டாலர் (6.9... மேலும் பார்க்க

இந்தியாவில் 200 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்ய ஹையர் நிர்ணயம்!

நொய்டா: ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 200 கோடி அமெரிக்க டாலர் விற்பனை நிறுவனமாக மாறும் என்று தெரிவித்துள்ளது.வீட்டு உபகரணங்கள் தயாரிப்பாளரான ஹையர், புதிய ஏசி உற்பத்தி மற்றும் ... மேலும் பார்க்க