செய்திகள் :

இந்தியாவில் 200 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்ய ஹையர் நிர்ணயம்!

post image

நொய்டா: ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 200 கோடி அமெரிக்க டாலர் விற்பனை நிறுவனமாக மாறும் என்று தெரிவித்துள்ளது.

வீட்டு உபகரணங்கள் தயாரிப்பாளரான ஹையர், புதிய ஏசி உற்பத்தி மற்றும் மோல்டிங் அலகுகளை அமைக்க 2024 முதல் 2028 க்கு இடையில் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தது.

ஏற்கனவே புனே மற்றும் நொய்டாவில் உள்ள அதன் ஆலைகளில் இதுவரை ரூ.2,400 கோடியை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் ஹேயர் இந்தியா 15 லட்சம் ஏசி யூனிட்டுகளிலிருந்து ஆண்டுக்கு 40 லட்சம் ஏசி யூனிட்டுகளை உற்பத்தியை செய்யும்.

தற்போது நிறுவனத்திடம் 15 லட்சம் ஏசி யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. இருப்பினும், இந்தியாவில் ஏசி சந்தை வளர்ந்து வரும் விதம் 2027ல் உற்பத்தி பற்றாக்குறையாக இருக்கும் என்றார்.

வரவிருக்கும் புதிய தொழிற்சாலையால், இது 25 லட்சம் யூனிட்களாக இருக்கும் என்றார் ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா தலைவரான என்.எஸ்.சதீஷ்.

தென்னிந்தியாவில் ஒரு ஆலையை அமைக்க உள்ளதாகவும் அதன் முதலீட்டை விரைவில் அறிவிப்போம் என்றார். 2024ல் ஹையர் வருவாய் 36 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ.8,900 கோடியாக உயர்ந்தது. அதே வேளையில், நடப்பாண்டு அதன் வருவாய் ரூ.11,500 கோடியைத் தாண்டும் என்றார்.

இந்தியாவில் ஒரு பெரிய வாய்ப்பை நாங்கள் காண்கிறோம். பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை நீங்கள் பார்க்கும்போது, இது மிகச் சிறப்பாக செயல்படுகிறது. ஹேயர் அப்ளையன்சஸ் இந்தியா எப்போது 2 பில்லியன் டாலர் நிறுவனமாக மாறும் என்ற கேள்விக்கு அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், நிச்சயமாக 2 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்றார்.

இதையும் படிக்க: பிகார் அரசு பள்ளிகளில் புதிதாக 51,389 ஆசிரியர்கள் நியமனம்!

டிரம்ப் நிர்வாகத்தில் பொறுப்பேற்றதுமுதல் சரியும் எலான் மஸ்க்!

அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு 7வது வாரமாகத் தொடர்ந்து சரிந்துள்ளது. டெஸ்லாவின் மதிப்பு கடந்த வாரத்தில் 10% சரிந்த நிலையில், இதுவரை 800 பில்லியன் டாலர் (6.9... மேலும் பார்க்க

மகளிருக்கான சிறப்பு கடன் திட்டம்: எஸ்பிஐ அறிமுகம்

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பெண் தொழில்முனைவோருக்கான சிறப்பு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து வங... மேலும் பார்க்க

மின்சாரக் காா்களின் விற்பனை 19% அதிகரிப்பு

இந்தியாவில் மின்சார பயணிகள் வாகனங்களின் விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 18.95 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பத... மேலும் பார்க்க

சக்கைப்போடு போடும் 7-சீட்டர் கார் இதுதான்! விலைக்காகவே வாங்கலாம்!!

இந்திய வாகனச் சந்தையில், 7 இருக்கை வசதிகொண்ட கார்களின் தகப்பன் என்று சொல்லும் அளவுக்கு பெயர் பெற்றிருக்கிறது மாருதி சுசூகி எர்டிகா.இந்தியாவில், எப்போதும் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்து செல்லும் அளவுக்கு ... மேலும் பார்க்க

ஹூண்டாய் விற்பனை 3% சரிவு

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் 3 ரிந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்... மேலும் பார்க்க

விரைவில் ஏடிஎம் மையத்திலிருந்து பிஎஃப் பணம் எடுக்கும் வசதி!

ஹைதராபாத்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 'ஈபிஎஃப்ஓ 3.0' என்ற புதிய முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை நேரடியாக ஏடிஎம்களிலிருந்து பெற... மேலும் பார்க்க