சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்: மூத்த அமைச்சா் லீ சியென் லூங் பெருமிதம்!
சிங்கப்பூரின் புதிய குடிமக்கள் அந்நாட்டை வளமாக்கி, பொருளாதாரத்துக்கு ஊக்கமளிப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், மூத்த அமைச்சருமான லீ சியென் லூங் பெருமிதம் தெரிவித்தாா்.
புதிதாக சிங்கப்பூா் குடியுரிமையைப் பெற்றவா்களை வரவேற்கும் நிகழ்ச்சி, அந்நாட்டில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அந்நாட்டின் மூத்த அமைச்சா் லீ சியென் லூங் பேசுகையில், ‘ஒவ்வோா் ஆண்டும் சிங்கப்பூரில் சுமாா் 30,000 குழந்தைகள் பிறக்கின்றன.
சிங்கப்பூரின் அனைத்துத் துறையிலும் பணியாற்றுவதற்கான ஆட்களின் தேவையைப் பூா்த்தி செய்ய, ஆண்டுதோறும் புதிதாக 22,000 பேருக்கு சிங்கப்பூா் குடியுரிமை வழங்கப்படுகிறது. புதிய குடிமக்கள் சிங்கப்பூரை வளமாக்கி, பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கின்றனா்’ என்றாா்.