செய்திகள் :

Mark Carney: "கனடா ஒருபோதும் அமெரிக்காவின் பகுதியாக இருக்காது" - புதிய பிரதமர் மார்க் கார்னி உறுதி

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற நாள் முதல் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கத் தீவிரம் காட்டி வருகிறார். இவ்வாறான சூழலில், இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக, கனடா (Canada) பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ருடோ (Justin Trudeau) அறிவித்தார்.

டொனால்ட் ட்ரம்ப் - ஜஸ்டின் ட்ருடோ
டொனால்ட் ட்ரம்ப் - ஜஸ்டின் ட்ருடோ

மேலும், ``கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுமா.... அதற்கு வாய்ப்பே இல்லை. ட்ரம்பின் அச்சுறுத்தல்களால் கனடா ஒருபோதும் பின்வாங்காது" என்று தெரிவித்த ஜஸ்டின் ட்ருடோ, ஆளும் லிபரல் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரையில் பதவியில் தொடர்வேன் என்று கூறினார். இந்த நிலையில், லிபரல் கட்சியின் தலைவராகவும், கனடா பிரதமராகவும் இங்கிலாந்து & கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் மார்க் கார்னி (Mark Carney) இன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மார்க் கார்னி 1,31,674 வாக்குகள் எனச் சுமார் 85.9 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். இவருடன் இந்தப் பதவிக்குப் போட்டியிட்ட கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் 11,134 வாக்குகளையும், கரினா கோல்ட் 4,785 வாக்குகளையும், பிராங்க் பெய்லிஸ் 4,038 வாக்குகளையும் பெற்றனர்.

வெற்றிக்குப் பிறகு பேசிய மார்க் கார்னி, ``நம்முடைய நாட்டின் நீர், நிலம், வளங்கள் ஆகியவற்றை அமெரிக்கா விரும்புகிறது. ட்ரம்ப் நமது கனேடிய தொழிலாளர்கள், குடும்பங்கள், வணிகங்களைத் தாக்குகிறார். இதில், அவரை வெற்றிபெற அனுமதிக்க முடியாது. இந்தத் தருணத்தில், கனேடியர்களுக்குத் தேவைப்படுவது கனடாவுக்காக நிற்பதுதான்.

மார்க் கார்னி
மார்க் கார்னி

சிறந்த தேசத்தை உருவாக்கப் போராடத் தயாராக இருக்கிறேன். கனடா ஒன்றும் அமெரிக்கா அல்ல. ஒருபோதும் அமெரிக்காவின் ஒரு பகுதியாகக் கனடா இருக்காது. நெருக்கடிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்று எனக்குத் தெரியும். இதுபோன்ற சூழ்நிலையில், நெருக்கடி மேலாண்மையில் உங்களுக்கு அனுபவமும், பேச்சுவார்த்தை திறனும் தேவை" என்று கூறினார்.

மார்க் கார்னி, 2008 முதல் 2013 வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராகவும், 2011 முதல் 2018 வரை நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`திமுக-வினர் நாகரீகமற்றவர்கள்’ - சர்ச்சையாக பேசிய Dharmendra Pradhan ; கொதித்த திமுக எம்.பிக்கள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இதில், மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் கல்வி நிதி மறுக்கப்படுவது குறித்துகேள்வியெழு... மேலும் பார்க்க

எஸ்.பி. வேலுமணி மகன் ரிசப்ஷன் : 1 லட்சம் பேர்; 30 வகை உணவுகள்; கோவையில் மாநாடு போல பிரமாண்டம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மகன் விஜய் விகாஷ் – தீக்‌ஷனா தம்பதிக்கு கடந்த மார்ச் 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து... மேலும் பார்க்க

DMDK: "ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக-வுடன் மனவருத்தமா?" - பிரேமலதா விஜயகாந்த் பளீர்

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்."பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க ம... மேலும் பார்க்க

அட்டைப்படம்

அட்டைப்படம் - விகடன் ப்ளஸ் மேலும் பார்க்க

"தம்பி விஜய் திமுக குறித்து கூறியுள்ளது தான் எங்களது நிலைப்பாடும்" - தமிழிசை கூற வருவது என்ன?

"நாடாளுமன்றத் தொகுதி மறுவரையில் தமிழ்நாடு பாதிக்கப்படாது, திமுகவின் குற்றங்களை மறைப்பதற்கு முதலமைச்சர் மத்திய அரசுக்கு தினம் ஒரு கடிதம் எழுதி வருகிறார்" என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவ... மேலும் பார்க்க

'அரசியல் கோமாளி... நான் பதில் கூறுவதாக இல்லை' - அண்ணாமலை மீது செந்தில் பாலாஜி விமர்சனம்

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அமலாக்கத்துறை சோதனை இன்னும் முழுமையாக முடியவில்லை. சோதனை நிறைவடைந்த பிறகு அதுகுறித்து பதில் அளிக... மேலும் பார்க்க