செய்திகள் :

'அரசியல் கோமாளி... நான் பதில் கூறுவதாக இல்லை' - அண்ணாமலை மீது செந்தில் பாலாஜி விமர்சனம்

post image

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அமலாக்கத்துறை சோதனை இன்னும் முழுமையாக முடியவில்லை. சோதனை நிறைவடைந்த பிறகு அதுகுறித்து பதில் அளிக்கிறேன்.” என்றவரிடம் செய்தியாளர்கள்,

செந்தில் பாலாஜி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “அரசியல் கோமாளிகளுக்கு நான் பதில் கூறுவதாக இல்லை.

இதுகுறித்து நான் ஏற்கெனவே உங்களிடம் கூறியுள்ளேன். அவர் ஒரு நிலைப்பாட்டில் இருக்க மாட்டார். காலையில் ஒரு செய்தி.. மாலை ஒரு செய்தி.. இரவு ஒரு செய்தி என்று இருப்பார். நமக்கெல்லாம் நிறைய வேலை இருக்கிறது. அவரின் பெயரையெல்லாம் வரும் நாள்களில் தவிர்த்து விடுங்கள்.

அண்ணாமலை

மக்களை பார்த்து சொல்வதற்கு அவர்களிடம் கருத்துகள் இல்லை. அதனால் பத்திரிக்கை ஊடகங்களில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

ஒவ்வொரு கட்சியும்.. அவர்கள் கட்சியின் கொள்கைகளை கருத்துக்களாக சொல்லத்தான் செய்வார்கள். முதலமைச்சரின் திட்டங்கள் தமிழ்நாட்டின் அடித்தள மக்கள் வரை சென்று சேர்ந்துள்ளன. முதலமைச்சர் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின்

ஒவ்வொரு திட்டத்தையும் அவர் பார்த்து பார்த்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். மக்களோடு மக்களாக யார் இருக்கிறார்கள் நாட்டுக்காக யார் உழைக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.” என்றார். 

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

"தம்பி விஜய் திமுக குறித்து கூறியுள்ளது தான் எங்களது நிலைப்பாடும்" - தமிழிசை கூற வருவது என்ன?

"நாடாளுமன்றத் தொகுதி மறுவரையில் தமிழ்நாடு பாதிக்கப்படாது, திமுகவின் குற்றங்களை மறைப்பதற்கு முதலமைச்சர் மத்திய அரசுக்கு தினம் ஒரு கடிதம் எழுதி வருகிறார்" என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவ... மேலும் பார்க்க

'தவம் இருக்கிறார்கள் என அதிமுகவை சொல்லவில்லை' - அண்ணாமலை புது விளக்கம்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நான் நேற்று பேசும்போது அதிமுக என்று எங்கேயும் சொல்லவில்லை. தொலைக்காட்சியில் வேலை இல்லாதவர்களை வைத்து விவாதம் நடத்துவதற்கு நா... மேலும் பார்க்க

பீகார் : யார் தலைமையில் தேர்தல்? - இந்தியா கூட்டணிக்குள் காங்கிரஸ் vs ஆர்.ஜே.டி யுத்தம்

பீகார் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதில் இந்தியா கூட்டணிக்குள் பெரும் சண்டை ஏற்பட்டுள்ளது.பீகார் தேர்தல்243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் Biography இப்போது Audio Formatல் - | Vikatan Play

‘‘நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன்’’ - இது ஜெயலலிதா, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லும் வசனம். இதை, வெறும் தட்டையான வரிகளாக மட்டும் பார்த்து கடந்து சென்றுவிட முடியாது... மேலும் பார்க்க

"விஜய்யை பார்த்து பாஜக பயப்படுகிறது; அதிமுக-வுடன் கூட்டணியா?" - தவெக ராஜ்மோகன் பதில்

சமீபத்தில் இரண்டாமாண்டு துவக்க விழாவை பிரமாண்டமாக கொண்டாடியது த.வெ.க. இங்கு பூத் கமிட்டியை வலுவாக்க வேண்டும் என்பது உள்ளிட்டு பலவற்றை சுட்டிக்காட்டி பேசினார் அதன் தலைவர் விஜய். அவரின் உரை பேசுபொருளானத... மேலும் பார்க்க