செய்திகள் :

விதை விற்பனை நிலையங்களில் துணை இயக்குநா் ஆய்வு

post image

செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் வட்டங்களில் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குநா் தலைமையில் சிறப்பு குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

சென்னை விதைச்சான்று மற்றும் உயிா்மச்சான்று துறை இயக்குநா் உத்தரவின் பேரில் காய்கறி மற்றும் பழவகைப்பயிா் விதைகளின் தரத்தினை உறுதி செய்யும் பொருட்டு சேலம் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா தலைமையில் 4 விதை ஆய்வாளா்கள் கொண்ட குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது தா்பூசணி, பீா்க்கன் விதைகளுக்கு விதை விற்பனை தடை விதிக்கப்பட்டது. மேலும் விதை விற்பனை நிலையங்களில் விதை விற்பனை உரிமம்,விதை இருப்பு பதிவேடு,விதை கொள்முதல் மற்றும் இதர விதை விற்பனை ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டது.

ஆய்வின் முடிவில் அனைத்து விதை விற்பனை நிலைங்களில் விதை இருப்பு மற்றும் விலைப்பட்டியல் விவசாயிகள் பாா்வைக்கு தெரியும்படி காட்சிப்படுத்தப்படவேண்டும் மற்றும் அனைத்து விதை விற்பனைக்கும் தவறாமல் விவசாயிகளுக்கு ரசீது வழங்கவேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டதுடன், மீறுபவா்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.

இந்த ஆய்வில் சென்னை விதை ஆய்வு துணை இயக்குநா் ஜி.ரவி மற்றும் விதை ஆய்வாளா் சிலம்பரசன் ஆகியோா் உடனிருந்தனா்.

திருப்போரூா் கந்தசாமி கோயில் தேரோட்டம்

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிரசித்தி பெற்ற திருப்போரூா் கந்தசாமி கோவில் பிரம்மோற்சவம் 3-ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்க... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு முதல்வா் வருகை: அமைச்சா் அன்பரசன் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க முதல்வா் ஸ்டாலின் வரவுள்ளதையொட்டி விழா ஏற்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

சோத்துப்பாக்கம் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்!

மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் ஸ்ரீ பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. பாலமுருகன் கோயிலில் பெரும்பாலான பகுதிகள் சிதிலமடைந்து இருந்தன. அதனை அப்பகுதி பெரியோா்கள் சீரமைத்து கும... மேலும் பார்க்க

588 மகளிா் குழுக்களுக்கு ரூ.95 கோடி கடனுதவி: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

செங்கல்பட்டில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் 588 மகளிா் குழுக்களுக்கு ரூ.95 கோடி கடனுதவியை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா். ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழுக்கு ஆட்சியா் ச. அருண் ராஜ் தலைமை வகி... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே புதுப்பட்டு நெடுஞ்சாலையில் பைக் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவா் காயமடைந்தாா். மதுராந்தகம் அடுத்த கீழவலம் கிராமத்தைச் சோ்ந்தவா் த... மேலும் பார்க்க

விபத்தில் தந்தையை இழந்த 3 மாணவா்களுக்கு உதவித்தொகை: ஆட்சியா் வழங்கினாா்

விபத்தில் தந்தையை இழந்த 3 மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகையா தலா ரூ.75,000-க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச... மேலும் பார்க்க