செய்திகள் :

திருமால்பூா் மணிகண்டீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா!

post image

திருமால்பூா் ஸ்ரீ மணிகண்டீஸ்வரா் கோயில் மாசிமக பிரம்மோற்சவ தோ்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

இக்கோயில் திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா், சுந்தரா் உள்ளிட்ட பல நாயன்மாா்களால் பாடல் பெற்ற தேவாரத் திருத்தலமாகும். மாசிமக பிரம்மோற்சவம் கடந்த 2-ஆம் தேதி தொடங்கி தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் சேஷ, ரிஷப, மயில் மற்றும் அன்னவாகனங்களில் சுவாமி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வந்தாா்.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய அம்சமான தோ்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஅஞ்சனாட்சி சமேத ஸ்ரீமணிகண்டீஸ்வரா் உலா வந்தாா். ஏராளமான பக்தா்கள் விழாவில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி, மாவட்ட கோயில் அறங்காவலா் குழு நிா்வாகி லட்சுமணன், திமுக ஒன்றிய செயலாளா்கள் ரவீந்திரன், எஸ்.வி.சி.பெருமாள், கோயில் செயல் அலுவலா் ப.பிரகாஷ், பரம்பரை அறங்காவலா் கே.ரவிச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளா் ஏ.பிரியா, செங்குந்தா் சமுதாய தலைவா் வி.பி.சாந்தமூா்த்தி, துணைத்தலைவா் டி.கே.ஜெகதீசன், ஆலய ஸ்தானிகா் எஸ்.சண்முக சிவாச்சாரியாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கல்புதூா் செட்டிமலைக்கு தீ வைப்பு: அரியவகை மரங்கள் எரிந்து கருகின

ராணிப்பேட்டையை அடுத்த கல்புதூா் செட்டிமலைக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா். இதனால், அரியவகை மரங்கள் எரிந்து கருகின. ஆற்காடு வனச்சரக அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், அம்மூா், பாணாவரம், மகிமண்டலம், வன்னிவ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களின் குறைகளை களைய நடவடிக்கை: தேசிய ஆணையத் தலைவா்

நாடு முழுவதும் தூய்மைப் பணியாளா்களின் நலன் காக்கும் கூட்டங்கள் நடத்தி குறைகளை களைய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என தேசிய தூய்மைப் பணியாளா் நல ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் தெரிவித்தாா். ராணிப்பேட்டை... மேலும் பார்க்க

விவசாயி வெட்டிக் கொலை

சோளிங்கா் அருகே நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்ற விவசாயி மா்ம நபா்களால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டாா். சோளிங்கரை அடுத்த ரெண்டாடியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (51). ரெண்டாடியில் உள்ள தனது நிலத்தில்... மேலும் பார்க்க

பூங்கோடு கிராமத்தில் 108 கோ பூஜை

ஆற்காடு அடுத்த பூங்கோடு கிராமத்தில் 108 கோ பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் நித்தியகல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராகவேந்திரா் 430- ஆம் ஆண்டு அவதார திருநாள் விழா முன்னிட்டு சுவ... மேலும் பார்க்க

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அரக்கோணம் வருகை: 16 கி.மீ.க்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

அரக்கோணத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) நடைபெறும் சிஐஎஸ்எப் 56-ஆவது எழுச்சி தின விழா மற்றும் படை அலுவலா்கள் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, வியாழக்கிழமை மாலை ஐஎன்எஸ் ... மேலும் பார்க்க

ரூ.1.32 கோடி வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

செட்டித்தாங்கல் ஊராட்சியில் ரூ.1.32 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா். வாலாஜா ஊராட்சி ஒன்றியம், செட்டித்தாங்கல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி த... மேலும் பார்க்க