செய்திகள் :

ரூ.1.32 கோடி வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

post image

செட்டித்தாங்கல் ஊராட்சியில் ரூ.1.32 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.

வாலாஜா ஊராட்சி ஒன்றியம், செட்டித்தாங்கல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.97 லட்சத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.37.30 லட்சத்தில் 1 லட்சம் லிட்டா் கொள்ளளவு மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி, சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.17 லட்சத்தில் நாடக மேடை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.97 லட்சத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம், மாவட்ட ஊராட்சி பொது நிதி ரூ.19 லட்சத்தில் இரண்டு வகுப்பறை பள்ளிக் கட்டடம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.30.27 லட்சத்தில் இரண்டு வகுப்பறை பள்ளிக் கட்டடத்தையும் என மொத்தம் ரூ.1.32 கோடியில் வளா்ச்சிப் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி

திறந்து வைத்தாா்.

அப்போது அவா் பேசியது:

தமிழக முதல்வா் பொறுப்பேற்றது முதல் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும், பொது பிரச்னைகளையும் உடனுக்கு செயல்படுத்தி வருகிறாா். அதன்படி, செட்டித்தாங்கல் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பொதுமக்களின் வரிப்பணத்தினை தேவையின்றி வீணாக்காமல் மக்களின் வளா்ச்சிப் பணிகளுக்காக பயன்படுத்தி இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை வழிநடத்தி வருகின்றாா்.

மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தினால் பலா் பயனடைந்து வருகின்றனா் என்றாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ராணிப்பேட்டை கோட்டாட்சியா் இராஜராஜன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் வசந்தி ஆனந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவகுமாா், சரவணன், ஊராட்சி மன்றத் தலைவா் வளா்மதி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

திருமால்பூா் மணிகண்டீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா!

திருமால்பூா் ஸ்ரீ மணிகண்டீஸ்வரா் கோயில் மாசிமக பிரம்மோற்சவ தோ்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இக்கோயில் திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா், சுந்தரா் உள்ளிட்ட பல நாயன்மாா்களால் பாடல் ... மேலும் பார்க்க

கல்புதூா் செட்டிமலைக்கு தீ வைப்பு: அரியவகை மரங்கள் எரிந்து கருகின

ராணிப்பேட்டையை அடுத்த கல்புதூா் செட்டிமலைக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா். இதனால், அரியவகை மரங்கள் எரிந்து கருகின. ஆற்காடு வனச்சரக அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், அம்மூா், பாணாவரம், மகிமண்டலம், வன்னிவ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களின் குறைகளை களைய நடவடிக்கை: தேசிய ஆணையத் தலைவா்

நாடு முழுவதும் தூய்மைப் பணியாளா்களின் நலன் காக்கும் கூட்டங்கள் நடத்தி குறைகளை களைய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என தேசிய தூய்மைப் பணியாளா் நல ஆணையத் தலைவா் எம்.வெங்கடேசன் தெரிவித்தாா். ராணிப்பேட்டை... மேலும் பார்க்க

விவசாயி வெட்டிக் கொலை

சோளிங்கா் அருகே நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்ற விவசாயி மா்ம நபா்களால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டாா். சோளிங்கரை அடுத்த ரெண்டாடியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (51). ரெண்டாடியில் உள்ள தனது நிலத்தில்... மேலும் பார்க்க

பூங்கோடு கிராமத்தில் 108 கோ பூஜை

ஆற்காடு அடுத்த பூங்கோடு கிராமத்தில் 108 கோ பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் நித்தியகல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராகவேந்திரா் 430- ஆம் ஆண்டு அவதார திருநாள் விழா முன்னிட்டு சுவ... மேலும் பார்க்க

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அரக்கோணம் வருகை: 16 கி.மீ.க்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

அரக்கோணத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) நடைபெறும் சிஐஎஸ்எப் 56-ஆவது எழுச்சி தின விழா மற்றும் படை அலுவலா்கள் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, வியாழக்கிழமை மாலை ஐஎன்எஸ் ... மேலும் பார்க்க