செய்திகள் :

`திமுகவுக்கு எதிரான பிளான்... எடப்பாடிக்கு என் ஆதரவு’ - சீமான் சொல்வது என்ன?

post image

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புதிய கல்வி கொள்கையில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இது நம் குழந்தைகளுக்கு எழுதி வைக்கப்பட்ட மரண சாசனம். மாணவர்கள் விரும்பிய கல்வியை படிக்க பெரிய தடையாக இருக்கிறது.

நாட்டை நிர்வகிக்கும் தலைவர்களுக்கு என்ன தேர்வு இருக்கிறது. எந்த  தகுதியும் இல்லாதவர் நாட்டை ஆள முடியும். மற்றவைக்கு மட்டும் தேர்வு எழுத வேண்டும் என்பது சரியானது கிடையாது.

சீமான்

திமுகவுக்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. இதை அவர் ஒருங்கிணைத்தால் மகிழ்ச்சி. இதில் என் பங்கு முதன்மையாக இருக்கும். அவர்கள் ஒன்றாக இருப்பார்கள்.

ஆனால் நான் மட்டும் தனியாக இருப்பேன். கூட்டணியில் இல்லாமல் வெல்ல முடியும். கொள்கை இல்லாமல் கூட்டணி மட்டும் வென்று விடுமா. கூட்டணியில் வெற்றி  பெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன சாதித்து இருக்கின்றனர்.

ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடும் இஸ்லாமியர் நான் இல்லை. தம்பி விஜய் இதை  விரும்புகிறார். விஜய் நோன்பு கஞ்சி கொடுத்ததால் விலைவாசி ஏறியது, மின்தடை ஏற்பட்டது என்றால் விவாதிக்கலாம் . அதனால் நாட்டுக்கும், மக்களுக்கும் என்ன பாதிப்பு.

தவெக இஃப்தார் விருந்து - விஜய்

 மீனவர் விவகாரத்தில் காங்கிரஸ், பாஜகவுக்கு தமிழர்களின் உணர்வுகள் மீது அக்கறை இல்லை. இந்த மக்களின் எதிர்காலத்தை பற்றி திமுக, அதிமுகவுக்கும் அக்கறை இல்லை. கேரள மீனவர்கள் எத்தனை பேரை இலங்கை அரசு கைது செய்துள்ளது.” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`மக்கள் உரிய நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள்' - தர்மேந்திர பிரதானைச் சாடிய செல்வப்பெருந்தகை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இதில், மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் கல்வி நிதி மறுக்கப்படுவது குறித்து கேள்வியெழ... மேலும் பார்க்க

போலி வாக்காளர் அட்டை: "எல்லா மாநிலங்களிலும் கேள்விகள் எழுகின்றன" - விவாதிக்கக் கோரும் ராகுல் காந்தி

இந்தியாவின் பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கியது. இதில் வாக்காளர் அடையாள அட்டை எண் தொடர்பான விவாதத்துக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைப... மேலும் பார்க்க

Lalit Modi: அதிரடி உத்தரவிட்ட VANUATU பிரதமர்; ரத்தாகும் லலித் மோடியின் பாஸ்போர்ட் - பின்னணி என்ன?

இந்தியாவில் பல ஆயிரம் கோடி புரளக்கூடிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்த லலித் மோடி இப்போது லண்டனில் இருக்கிறார். அவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து, அவர... மேலும் பார்க்க

நகைக்கடனில் புதிய விதிமுறை: `ஏழை மக்களை வாட்டும்’ - RBI திரும்பப்பெற வலியுறுத்தும் சீமான்

ரிசர்வ் வங்கி பழைய விதிமுறையின்படி, வங்கிகளில் அடமானம் வைத்த நகைகளை ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கட்டி, மறு அடமானம் வைக்கலாம். ஆனால், ரிசர்வ் வங்கி தற்போது கொண்டுவந்திருக்கும் புதிய விதிமுறையின்படி, இனிமேல... மேலும் பார்க்க

மொகலாய மன்னன் ஒளரங்கசீப் கல்லறை அகற்றப்படுமா? - மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் சொல்வதென்ன?

சமீபத்தில் வெளி வந்த சாவா என்ற இந்தி படம் சத்ரபதி சிவாஜி மகன் சத்ரபதி சாம்பாஜியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. சத்ரபதி சாம்பாஜியை மொகலாய மன்னன் ஒளரங்கச... மேலும் பார்க்க

`நாகரீகமற்றவர்களா?' தமிழச்சி vs தர்மேந்திர பிரதான் vs கனிமொழி - மக்களவையில் நடந்த மோதல்| முழு விவரம்

நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கிய மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில், தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி விவகாரத்தில் தி.மு.க எம்.பி எழுப்பிய கேள்விஎழுப்பியதற்கு, `நாகரீகமற்றவர்கள்' என மத்திய கல்... மேலும் பார்க்க