செய்திகள் :

'ஹோலி பண்டிகையன்று முஸ்லீம்கள் வீட்டிற்குள்ளேயே இருங்கள்' - பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு!

post image

ஹோலி பண்டிகையன்று முஸ்லீம்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிகார் பாஜக எம்எல்ஏ ஒருவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம் மதுபானி மாவட்டம் பிஸ்ஃபி தொகுதி எம்எல்ஏ ஹரிபூஷன் தாக்கூர் பச்சௌல் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களுடன் பேசும்போது, ரமலான் மாதத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஹோலி பண்டிகை வருவதால் இந்துக்களுடன் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க முஸ்லீம்கள் அன்று வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

"முஸ்லீம் மக்களிடம் நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். நீங்கள் நமாஸ் செய்வதற்கு ஒரு ஆண்டுக்கு 52 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. ஆனால் ஹோலி இதில் ஒரே ஒரு வெள்ளிக்கிழமைதான் வருகிறது. எனவே இந்துக்கள் தங்கள் பண்டிகையைக் கொண்டாட அனுமதிக்க வேண்டும். முஸ்லீம்கள் மீது வண்ணங்கள் பூசப்பட்டால் கோபப்படக் கூடாது. அவர்களுக்கு இது பிரச்னையாக இருந்தால், அன்றைய தினம் வீட்டிற்குள்ளேயே இருந்துகொள்ள வேண்டும். சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு இது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | திமுக எம்.பி.க்கள் பற்றி தவறான கருத்து: திரும்பப் பெற்றார் பிரதான்!

மேலும், ஹோலி பண்டிகைக்காக முஸ்லீம்கள்தான் வண்ணப்பொடிகளை விற்பனை செய்வதாகவும் ஆனால் அந்த வண்ணப்பொடி தங்கள் துணிகளில் பட்டால் நரகத்திற்குச் செல்வதுபோல் அவர்கள் உணர்வதாகவும் கூறியுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா கட்சி எம்எல்ஏ இஸ்ராயில் மன்சூரி, பாஜக எம்எல்ஏவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் ஹோலி அன்று முஸ்லீம்கள் பற்றி பாஜக எம்எல்ஏவுக்கு என்ன கவலை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இங்கு இந்து - முஸ்லீம்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பிகார் நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை! ரூ.2 கோடியா, ரூ.25 கோடியா?

பிகார் மாநிலம் போஜ்புர் மாவட்டம் கோபாலி சௌக் பகுதியில் இயங்கி வரும் மிகப் பிரபலமான நகைக் கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் 2047-க்குள் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்கும்: அஜித் பவார்

பிரதமரின் வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் மாநிலம் முன்னணிப் பங்காற்றத் தயாராக உள்ளதாக மகாராஷ்டிரம் துணை முதல்வர் அஜித் பவார் கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன... மேலும் பார்க்க

ஸோஹோவின் இ-ஸ்கூட்டர்.. அறிமுக விலை இவ்வளவுதானா? தள்ளுபடியுமா?

ஸோஹோவின் அல்ட்ராவயலட் நிறுவனத்தின் முதல் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் குவிந்து வருகிறது. அதனால், தள்ளுபடியையும் நிறுவனம் அதிரடியாக அறிவித்து வருகிறது.தகவல்தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஸோஹோ ந... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் எப்படி இருந்தது?

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் இன்று கணிதப் பாடத் தேர்வு நடைபெற்றது.நாட... மேலும் பார்க்க

தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி: மக்களவையில் பாஜக எம்பி

தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி என்று மக்களவையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே திங்கள்கிழமை பேசியுள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை தொடங்கிய நிலையில், தேசிய கல்விக் ... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும்: ராகுல்

வாக்காளர் பட்டியல் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தினார். பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன... மேலும் பார்க்க