செய்திகள் :

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் எப்படி இருந்தது?

post image

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் இன்று கணிதப் பாடத் தேர்வு நடைபெற்றது.

நாடு முழுவதும் 7,842 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று நடைபெற்ற கணிதப் பாட வினாத்தாள் எப்படி இருந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.

பொதுவாக தேர்வெழுதிய மாணவர்களைப் பொருத்தவரை இந்த கணித வினாத்தாள் சற்று கடினமாக இருந்தது என்றுதான் கூறியிருக்கிறார்கள். பெரும்பாலான கேள்விகள் நேரடியாகவே கேட்கப்பட்டிருந்ததாகவும், நேரம் போதாமையால் சில மாணவர்கள் சில கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் போனதாகவும் கூறியுள்ளனர்.

கேள்விகள் கடினமாக இல்லை. ஆனால், அனைத்தையுமே அப்படி சொல்லிவிட முடியாது. வழக்கம்போல நீண்ட வினாத்தாள் சிக்கலால் சில மாணவர்கள் கடைசியாக கேட்கப்பட்ட இரண்டு அல்லது மூன்று கேள்விகளுக்கு பதில் எழுத முடியாமல் போனதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அதாவது, நல்ல மதிப்பெண் எடுப்பதற்கான வினாத்தாள்தான், ஆனால், நீண்ட கணக்குப்போட்டுப் பார்த்து ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டியது இருந்ததால் நேரம்போதவில்லை என்றே தெரிவித்துள்ளனர்.

பிப்.15ஆம் தேதி தொடங்கிய 10-ஆம் வகுப்புத் தோ்வுகள் மாா்ச் 18-ஆம் தேதி முடிவடைகிறது. 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் ஏப்ரல் 4-ஆம் தேதி முடிவடைகிறது.

இந்தப் பொதுத் தேர்வை நாடு முழுவதும் 42 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். 10ஆம் வகுப்புக்கு 84 பாடப்பிரிவுகளிலும், 12ஆம் வகுப்புக்கு 120 பாடப்பிரிவுகளிலும் தேர்வுகள் நடைபெறும்.

ஆடம்பர ஆடைகளைத் தவிர்க்கும் இந்திய மணப்பெண்கள்!

இந்திய மணப்பெண்கள் திருமண நாளில் ஆடம்பர ஆடைகள் அணிவதைத் தவிர்த்து வருவதாக நட்சத்திர ஆடை வடிவமைப்பாளர் சப்யாசச்சி முகர்ஜி தெரிவித்துள்ளார். ஆடம்பரமான இந்திய திருமண கலாசாரத்துக்கு மாறாக எளிமையான வடிவமைப... மேலும் பார்க்க

சோப்பு விலையை உயர்த்தும் முன்னணி நிறுவனங்கள்!

சோப்பு விலையை உயர்த்த முன்னணி சோப்பு தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் தயாரிப்பு சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பாமாயில் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற... மேலும் பார்க்க

ஆன்லைன் 'டயட்'டால் கேரள இளம்பெண் உயிரிழந்த சோகம்!

உடல் எடையைக் குறைப்பதற்காக ஆன்லைன் விடியோக்களைப் பார்த்து டயட் இருந்த கேரள பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பா பகுதியைச் சேர்ந்த... மேலும் பார்க்க

பிகார் நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை! ரூ.2 கோடியா, ரூ.25 கோடியா?

பிகார் மாநிலம் போஜ்புர் மாவட்டம் கோபாலி சௌக் பகுதியில் இயங்கி வரும் மிகப் பிரபலமான நகைக் கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் 2047-க்குள் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்கும்: அஜித் பவார்

பிரதமரின் வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் மாநிலம் முன்னணிப் பங்காற்றத் தயாராக உள்ளதாக மகாராஷ்டிரம் துணை முதல்வர் அஜித் பவார் கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன... மேலும் பார்க்க

ஸோஹோவின் இ-ஸ்கூட்டர்.. அறிமுக விலை இவ்வளவுதானா? தள்ளுபடியுமா?

ஸோஹோவின் அல்ட்ராவயலட் நிறுவனத்தின் முதல் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் குவிந்து வருகிறது. அதனால், தள்ளுபடியையும் நிறுவனம் அதிரடியாக அறிவித்து வருகிறது.தகவல்தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஸோஹோ ந... மேலும் பார்க்க