செய்திகள் :

ஸோஹோவின் இ-ஸ்கூட்டர்.. அறிமுக விலை இவ்வளவுதானா? தள்ளுபடியுமா?

post image

ஸோஹோவின் அல்ட்ராவயலட் நிறுவனத்தின் முதல் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் குவிந்து வருகிறது. அதனால், தள்ளுபடியையும் நிறுவனம் அதிரடியாக அறிவித்து வருகிறது.

தகவல்தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஸோஹோ நிறுவனம், வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியதுதான் அல்ட்ராவயலட் நிறுவனம்.

இது தற்போது மின்னணு ஸ்கூட்டர்களை தயாரிப்பதில் ஆர்வம்காட்டி வருகிறது. அதன்படி, கடந்த புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட டெஸ்ஸராக்ட் அறிமுக விலை ரூ.1.20 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விலை முதல் 10 ஆயிரம் முன்பதிவாளர்களுக்கு மட்டுமே என்றும், அதன் பிறகு முன்பதிவு செய்பவர்களுக்கான விலை ரூ.1.45 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, ஷாக்வேவ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இ-பைக் அறிமுக விலை ரூ.1.43 லட்சம். இது முதல் 1000 பயனர்களுக்கு மட்டுமே. முன்பதிவு புதன்கிழமை முதல் தொடங்கியிருந்தாலும் வாகனங்கள் முன்பதிவு செய்த பயனாளர்களுக்கு 2026ஆம் ஆண்டு முதல் காலாண்டில்தான் ஒப்படைக்கப்படவிருக்கிறதாம்.

டாடா மோட்டார்ஸ் - ஸோஹோ கார்ப்பரேஷன் முதலீட்டாளர்களாக இருக்கும் அல்ட்ராவயலட் நிறுவனம், அடுத்த 3 ஆண்டுகளில் 10 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த இ-பைக்குகள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 261 கிலோ மீட்டர் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆடம்பர ஆடைகளைத் தவிர்க்கும் இந்திய மணப்பெண்கள்!

இந்திய மணப்பெண்கள் திருமண நாளில் ஆடம்பர ஆடைகள் அணிவதைத் தவிர்த்து வருவதாக நட்சத்திர ஆடை வடிவமைப்பாளர் சப்யாசச்சி முகர்ஜி தெரிவித்துள்ளார். ஆடம்பரமான இந்திய திருமண கலாசாரத்துக்கு மாறாக எளிமையான வடிவமைப... மேலும் பார்க்க

சோப்பு விலையை உயர்த்தும் முன்னணி நிறுவனங்கள்!

சோப்பு விலையை உயர்த்த முன்னணி சோப்பு தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் தயாரிப்பு சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பாமாயில் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற... மேலும் பார்க்க

ஆன்லைன் 'டயட்'டால் கேரள இளம்பெண் உயிரிழந்த சோகம்!

உடல் எடையைக் குறைப்பதற்காக ஆன்லைன் விடியோக்களைப் பார்த்து டயட் இருந்த கேரள பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பா பகுதியைச் சேர்ந்த... மேலும் பார்க்க

பிகார் நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை! ரூ.2 கோடியா, ரூ.25 கோடியா?

பிகார் மாநிலம் போஜ்புர் மாவட்டம் கோபாலி சௌக் பகுதியில் இயங்கி வரும் மிகப் பிரபலமான நகைக் கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் 2047-க்குள் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்கும்: அஜித் பவார்

பிரதமரின் வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் மாநிலம் முன்னணிப் பங்காற்றத் தயாராக உள்ளதாக மகாராஷ்டிரம் துணை முதல்வர் அஜித் பவார் கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் எப்படி இருந்தது?

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் இன்று கணிதப் பாடத் தேர்வு நடைபெற்றது.நாட... மேலும் பார்க்க