செய்திகள் :

ஐபிஎல் தொடரில் விளையாட பிரபல இங்கிலாந்து வீரருக்கு 2 ஆண்டுகள் தடை; காரணம் என்ன?

post image

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு பிரபல இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்குக்கு தடை விதிக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடவுள்ளது.

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: கடந்த கால ஐசிசி நாக் அவுட் தோல்விகளிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம்: விராட் கோலி

2 ஆண்டுகள் தடை

விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதில் கவனம் செலுத்த உள்ளதால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஹாரி ப்ரூக் (கோப்புப் படம்)

இது தொடர்பாக ஹாரி ப்ரூக் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: எதிர்வரும் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவது என்ற மிகவும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். என்னுடைய இந்த முடிவுக்காக தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகத்திடமும், அந்த அணியின் ரசிகர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இங்கிலாந்து அணிக்காக நேரம் ஒதுக்க இது உண்மையில் மிகவும் முக்கியமான நேரம். இங்கிலாந்து அணி அடுத்து விளையாடவுள்ள தொடர்களுக்காக தயாராக விரும்புகிறேன்.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி தோல்வி: நியூசி. கேப்டன் கூறியதென்ன?

என்னுடைய இந்த முடிவை அனைவரும் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என நான் எதிர்பார்க்கவும் இல்லை. நான் எதனை சரி என நம்புகிறேனோ அதனை செய்ய விரும்புகிறேன். இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதிலேயே கவனம் செலுத்த விரும்புகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் ஹாரி ப்ரூக் தில்லி கேபிடல்ஸ் அணியால் ரூ.6.25 கோடிக்கு வாங்கப்பட்டிருந்தார். தற்போது அவரது திடீர் விலகல் அந்த அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் விளையாடத் தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வீரருக்கு இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐ சார்பில் தடை விதிக்கப்படும். அதன் அடிப்படையில், அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட ஹாரி ப்ரூக்குக்கு தடை விதிக்கப்படவுள்ளது. காயம் ஏற்பட்டால் மட்டுமே வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி வருகிற ஜூன் மாதத்தில் அதன் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன் பின், நவம்பர் - ஜனவரி இடைவெளியில் ஆஷஸ் தொடரில் விளையாடவுள்ளது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி: பரிசளிப்பு விழாவுக்கு அழைக்கப்படாத பாகிஸ்தான் பிரதிநிதி!

26 வயதாகும் ஹாரி ப்ரூக் அவரது பாட்டி இறந்துவிட்ட காரணத்தால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகியது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் டிராபி 2025: சிறந்த அணியை அறிவித்த ஐசிசி; 6 இந்திய வீரர்களுக்கு இடம்!

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறந்த அணியை ஐசிசி இன்று (மார்ச் 10) அறிவித்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. துபையில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸின் புதிய கேப்டன் யார்? கே.எல்.ராகுலா? அக்‌ஷர் படேலா?

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் அல்லது அக்‌ஷர் படேல் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025: புகையிலை, மது விளம்பரங்களுக்கும் விற்பனைக்கும் தடை!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் புகையிலை, மது விளம்பரங்களை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது.ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் விளையட்டுத் திடல்களிலும் அதேபோல, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடக நேரலையிலும் புகையி... மேலும் பார்க்க

கடந்த கால ஐசிசி நாக் அவுட் தோல்விகளிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம்: விராட் கோலி

கடந்த கால ஐசிசி நாக் அவுட் தோல்விகளிலிருந்து இந்திய அணி நிறைய கற்றுக்கொண்டதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்றுடன் (மார்ச் 9) நிறைவடைந்தது. துபையில் நேற்று ... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி தோல்வி: நியூசி. கேப்டன் கூறியதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்வி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்றுடன் (மார... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: பரிசளிப்பு விழாவுக்கு அழைக்கப்படாத பாகிஸ்தான் பிரதிநிதி!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பரிசளிப்பு விழாவின்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதியை மேடைக்கு அழைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சாம்பியன்ஸ் டிராபி - 2025 தொடரின் இறுதிப் போட்டி துபைய... மேலும் பார்க்க