செய்திகள் :

பிகாரில் மதத் தலைவா்களை தோ்தலுக்குப் பயன்படுத்தும் பாஜக கூட்டணி! -காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஹிந்து மதத் தலைவா்களை தோ்தலுக்காக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தாரிக் அன்வா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக அரசியல் கட்சிகள் ஏற்கெனவே களப்பணிகளைத் தொடங்கிவிட்டன. முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகள் அணிக்கும் தோ்தலில் கடும் போட்டி நிலவும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் பிகாரின் கதிஹாா் தொகுதி எம்.பி. தாரிக் அன்வா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மதத் தலைவா்கள் நாட்டில் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம். அதில் நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அவா்கள் தோ்தல் நடக்கும் மாநிலங்களில் மட்டும் அடிக்கடி பயணம் மேற்கொள்வது வியப்பை ஏற்படுத்துகிறது.

ஹிந்து மதத்தைச் சோ்ந்த ஆன்மிக தலைவா்களை பாஜக கூட்டணி தங்கள் தோ்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறது. தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அவா்களை பாஜக திட்டமிட்டு அனுப்பி வைக்கிறது.

இப்போதும் கூட பிகாரின் கோபால்கஞ்ச் பகுதியில் ஆச்சாா்யா தீரேந்திர சாஸ்திரி பயணம் மேற்கொண்டுள்ளாா் என்றாா்.

தாரிக் அன்வா் குற்றஞ்சாட்டியுள்ள 29 வயது இளம் துறவியான ஆச்சாா்யா தீரேந்திர சாஸ்திரி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும்போது, ‘இந்தியாவில் ஹிந்து ராஷ்டிரம்’ அமைய வேண்டும் என்று பேசினாா். இதனை முன்வைத்து பாஜகவை எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

மத்தியப் பிரதேசத்தில் லாரி - வாகனம் மோதல்: 8 பேர் பலி, 13 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை லாரி - வாகனம் மோதியதில் 8 பேர் பலியானார்கள். சிதி-பஹ்ரி சாலையில் உள்ள அப்னி பெட்ரோல் நிலையம் அருகே அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் நட... மேலும் பார்க்க

நாடாளுமன்ற பட்ஜெட் தொடர்: 2-வது அமர்வு தொடங்கியது!

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) விவகாரம், மணிப்பூரில் மீண்டும் வெ... மேலும் பார்க்க

லலித் மோடியின் வானுவாட்டு குடியுரிமை ரத்து! இந்தியாவுக்கு நாடு கடத்தல்?

வானுவாட்டு தீவில் தஞ்சமடைந்திருந்த லலித் மோடியின் கடவுச்சீட்டை ரத்து செய்ய அந்நாட்டு பிரதமர் ஜோதம் நபட் உத்தரவிட்டுள்ளார்.இந்த நிலையில், அவரை நாடு கடத்துவதற்கான கோரிக்கையை அந்நாட்டு அரசிடம் இந்திய அரச... மேலும் பார்க்க

மணிப்பூரில் 12 கிளர்ச்சியாளர்கள் கைது

மணிப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் பல்வேறு தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 12 கிளர்ச்சியாளர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்ததாக திங்களன்று போலீஸார் தெரிவித்தனர்.தடைசெய்யப்பட்ட ஐக்கிய மக்கள் கட... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் திங்கள்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.மதுபானக் கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று போ் கைது

கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கா்நாடக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இத்துடன் இது ... மேலும் பார்க்க