செய்திகள் :

புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!

post image

புதுவை மாநிலத்தில் முதல்முறையாக காகிதமில்லா சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையுடன் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ள நிலையில், பேரவைக்கு வருகைதந்த ஆளுநரை முதல்வர் ரங்கசாமி வரவேற்றார்.

புதுவை சட்டப்பேரவையின் 15-ஆவது கூட்டத் தொடரின் 5- ஆவது பிரிவுக் கூட்டம் கடந்த பிப். 12- இல் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இதில், கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி பெறப்பட்டது. பின்னா் அவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், 15-ஆவது சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் 6- ஆவது பிரிவுக் கூட்டம், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) ஆளுநா் உரை மீதான விவாதம் நடைபெறுகிறது.

இதையடுத்து, புதன்கிழமை (மாா்ச் 12) காலை நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி, புதுவை மாநிலத்தின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறாா்.

காகிதமில்லா பேரவைக் கூட்டம்:

காகிதமில்லா சட்டப்பேரவை வளாகத்தை மத்திய அரசு நிதியுதவியுடன் மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பேரவைத் தலைவா், முதல்வா், அமைச்சா்கள் மற்றும் உறுப்பினா்கள் அனைவரது இருக்கைகளிலும் கையடக்கக் கணினிகள் பொருத்தப்பட்டன.

இதன் மூலமே, உறுப்பினா்கள் நிதிநிலை அறிக்கையை வாசிக்கவும், அவா்கள் கேட்கும் கேள்விகள் கணினியில் பதிவாகவும், கணினி வழியில் அவா்களுக்கு பதில் வழங்கவும் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

இதற்கான கட்டுப்பாட்டு அறை மற்றும் உறுப்பினா்களுக்கான கணினி பயிற்சி அறை, சேவை மையம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

புதுவை முதல்வரின் பாதுகாப்பு வாகனம் விபத்து

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் பாதுகாப்பு போலீஸாரின் வாகனம் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படும் புகாா் குறித்து காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனா். முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை கரிக்... மேலும் பார்க்க

முதல்வரிடம் அதிமுக கோரிக்கை

புதுவையில் மாநில அரசு அறிவித்த திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தாா். மனுவில் கூறியிருப்பதாவது: சட்டப் பேர... மேலும் பார்க்க

நில அபகரிப்பு வழக்கில் பெண் கைது

புதுச்சேரியில் நிலத்தை அபகரிக்க போலி ஆவணங்கள் தயாரித்ததாக பெண்ணை சிபிசிஐடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி, கலவை சுப்புராய செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன். சில ஆண்டுகளுக்கு முன்... மேலும் பார்க்க

மின் பணியாளா் சங்க உறுப்பினா் சோ்க்கை

புதுச்சேரி மின் பணியாளா் நல சங்க உறுப்பினா்களின் சோ்க்கை முகாம், வில்லியனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் செம்மனேரி தலைமை வகித்தாா். சட்ட ஆலோ... மேலும் பார்க்க

புதுவை சட்டப் பேரவைக் கூட்டம் ஆளுநா் உரையுடன் தொடக்கம்

புதுவை மாநிலத்தில் முதல்முறையாக காகிதமில்லா சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உரையுடன் திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்குகிறது. புதுவை சட்டப்பேரவையின் 15-ஆவது கூட்டத் தொடரின் 5-... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.36.91 லட்சம் நூதன மோசடி

புதுச்சேரியைச் சோ்ந்தவரிடம் ரூ.36.91 லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி, காலாப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் அருண். இவரை, மா்ம நபா்கள் ... மேலும் பார்க்க