செய்திகள் :

எங்கள் முதல்வரே சூப்பர் முதல்வர்தான்: தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஸ் பதில்

post image

எங்கள் முதல்வரே சூப்பர் முதல்வர்தான் என்றும், மும்மொழிக் கொள்கை எனும் சங்கிலியை காலில் கட்டப்பார்க்கிறார்கள் என்றும் தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

தமிழக கல்வித் துறை அமைச்சர் தலைமையில், திமுக எம்.பி.க்கள் தன்னை வந்து சந்தித்து, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துவிட்டு, பிறகு யாரோ ஒரு சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு எதிர்ப்பதாக, மக்களவையில் இன்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்திருக்கும் தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ்,

அனைத்திலும் முதல் பரிசை பெறுவதால் தமிழ்நாட்டை ஓட விட மாட்டேன் என்கிறார்கள். அதனால்தான், மும்மொழி கொள்கை எனும் சங்கிலியை காலில் கட்டிவிட்டு ஓடு ஓடு எனக் கூறுகின்றனர்.

பிம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக குழு அமைத்த பிறகே முடிவு என கடிதத்தில் தெளிவாக கூறினோம். நாட்டின் நம்பர் ஒன் முதல்வராக ஸ்டாலின்தான் சூப்பர் முதல்வர் என அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், மத்திய அரசு நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும் அன்பில் மகேஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மக்களவையில் இன்று தமிழகத்துக்கு கல்வி நிதி ஒதுக்கப்படாதது குறித்து காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் அதற்கு பதிலடியாக அன்பில் மகேஸ் பேசியுள்ளார்.

ஒருநாள் தொப்பி அணிந்து வேடம் போடுபவன் நானல்ல: சீமான்

ஒருநாள் தொப்பி அணிந்து வேடம் போடுபவன் நானல்ல என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.திமுகவுக்கான எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது ... மேலும் பார்க்க

தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுகவினர் போராட்டம்!

திமுக எம்.பி.க்கள் பற்றி தவறாகப் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதனுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொட... மேலும் பார்க்க

யார் அந்த சூப்பர் முதல்வர்?

சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு தேசிய கல்விக் கொள்கையில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் பேசியிருப்பது விவாவதப் பொருளாகியுள்ளது.தேசிய ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எழுப்பிய 3 கேள்விகள்!

முதல்வர் ஸ்டாலினுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.தமிழக கல்வித் துறை அமைச்சர் தலைமையில், திமுக எம்.பி.க்கள் தன்னை வந்து சந்தித்து, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வ... மேலும் பார்க்க

உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடுதான் முகவரி: முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவில் தொழில் நுழைவுவாயிலாக தமிழ்நாடு திகழ்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில், 515 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ... மேலும் பார்க்க

4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை(மார்ச் 11)ஆம் தேதி நான்கு மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத... மேலும் பார்க்க