செய்திகள் :

Champions Trophy: "நிகழ்வில் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாருமில்லை?" - சோயப் அக்தர்

post image

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. டி20 உலகக்கோப்பையை வென்ற எட்டே மாதத்தில் இந்திய அணி இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வீரர் சோயப் அக்தர் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

இந்தியா

அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் பேசியிருப்பதாவது, "இந்திய அணி சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால், அங்கு நான் ஒரு வினோதமான விஷத்தைக் கவனித்தேன். போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு நிகழ்வில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் எந்த பிரதிநிதியும் அங்கே இருக்கவில்லை. பாகிஸ்தானில் சாம்பியன் ட்ராபி நடைபெறுகிறது. ஆனால் பாகிஸ்தானிலிருந்து எந்த பிரதிநிதிகளும் ஏன் இறுதிப்போட்டிக்குச் செல்லவில்லை என்பது என் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

கோப்பையை வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த யாராவதும் சென்றிருக்க வேண்டும்தானே? இது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. உலக அரங்கில் கவனம் பெறும் இந்த நிகழ்வில் பாகிஸ்தான் சார்பில் யாராவது இருந்திருக்க வேண்டும்" என்றார்.

சோயிப் அக்தர் (Champions Trophy)

அக்தரின் விமர்சனத்தைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Shreyas Iyer: இந்தியாவின் 'சைலன்ட் ஹீரோ' ஸ்ரேயாஷ் ஐயர்! கோப்பையை வெல்ல எப்படி உதவினார்?

சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றிருக்கிறது. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இறுதி வரை சென்று இந்திய அணி திரில்லாக வென்றிருந்தது. ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். இந்திய அணி இந்தத்... மேலும் பார்க்க

Rohit Sharma: "ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுகிறேனா?" - வதந்திகள் குறித்து ரோஹித் சொல்வதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை இந்திய அணி வென்றிருக்கிறது. 2013 க்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி கோப்பை மீண்டும் இந்திய அணியிடமே வந்திருக்கிறது. டி20 உலகக்க... மேலும் பார்க்க

`பந்தயம்னு வந்துட்டா நான் ராஜா' - தடையைத் தாண்டி சீறிப் பாய்ந்த குதிரைகள்; தேசிய அளவிலான போட்டி

ஆரோவில்லில் நடைபெறும் தேசிய அளவிலான குதிரைப் போட்டிபுதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான ஆரோவில்லில் நடைபெறும் தேசிய அளவிலான குதிரைப் போட்டியில் தடைகளை தாண்டும் வீரர்கள்புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுத... மேலும் பார்க்க

Ind v Nz : 'நியூசிலாந்தை வீழ்த்த இந்தியா செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!' - என்னென்ன தெரியுமா?

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் இன்று மோதவிருக்கின்றன. இரு அணிகளும் சமபலத்தில் இருப்பதால் போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தப் போட்டியி... மேலும் பார்க்க

Ind v Nz : `நியூசிலாந்தின் மிடில் ஓவர் Strategy' - இந்தியா செய்ய வேண்டிய அந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதவிருக்கின்றன. இந்தியாவும் நியூசிலாந்தும் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் அரையிறுதியில் ஆடியிருந்தன. அந்தப் போ... மேலும் பார்க்க

IPL 2025 : 'ஸ்லீவ்லெஸ் ஜெர்சிக்கு தடை?' - ஐ.பி.எல் இன் புதிய விதி

2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், ஐ.பி.எல் நிர்வாகம் வீரர்களுக்கு சில புதிய விதிமுறைகளை கொண்டு வந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.Kohliஐ.பி.எல்... மேலும் பார்க்க