செய்திகள் :

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம்-கார் மோதல்: இருவர் பலி!

post image

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது55) இவர் சவுண்ட் சர்வீஸ் மற்றும் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் கலந்திரா அடுத்த குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 35) இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார்.

கடந்த 4 நாள்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று சின்னத்தம்பி பந்தல் அமைப்பதற்காக நாட்றம்பள்ளி செல்வதாக இருந்தது. இவருடன் ராமனும் சென்றுள்ளார்.

இருவரும் இன்று காலை ஒரே இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடியில் இருந்து நாட்றம்பள்ளி நோக்கி சென்ற போது நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தபோது பின்னால் சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் பின்புறமாக வேகமாக மோதியுள்ளது.

இதில் இருசக்கர வாகனம் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற ராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சின்னதம்பி படுகாயம் அடைந்தார். இருசக்கர வாகனத்தின் மீது விபத்து ஏற்படுத்திய கார் அங்கு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் சின்னத் தம்பியை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது செல்லும் வழியிலேயே சின்னத்தம்பியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உடனடியாக அங்கு வந்த தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலீஸார் இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து சுங்கச் சாவடியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை எழுப்பிய 3 கேள்விகள்!

முதல்வர் ஸ்டாலினுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.தமிழக கல்வித் துறை அமைச்சர் தலைமையில், திமுக எம்.பி.க்கள் தன்னை வந்து சந்தித்து, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வ... மேலும் பார்க்க

உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடுதான் முகவரி: முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவில் தொழில் நுழைவுவாயிலாக தமிழ்நாடு திகழ்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில், 515 கோடி ரூபாய் முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ... மேலும் பார்க்க

4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை(மார்ச் 11)ஆம் தேதி நான்கு மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத... மேலும் பார்க்க

மாயமாகி 26 நாள்கள்.. 15 வயது சிறுமி, ஆட்டோ ஓட்டுநர் சடலமாக மீட்பு

காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் 26 நாள்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பார்க்க

பழ. நெடுமாறன் பிறந்த நாள்: முதல்வர் வாழ்த்து!

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வழியாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில... மேலும் பார்க்க

தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கீடு குறித்து மக்களவையில் இன்று விவாதத்தில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.தன்னை மன்னரென ... மேலும் பார்க்க