செய்திகள் :

பூபேஷ் பாகேல் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: காங்கிரஸ் போராட்டம்!

post image

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் வீட்டிற்கு வெளியே காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் திங்கள்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

மதுபானக் கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகலின் மகன் சைதன்யா பாகல் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்துள்ளது.

இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் அரசுக்கு சுமார் ரூ. 2,100 கோடிவரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், துர்க் மாவட்டம் பிலாயில் உள்ள பூபேஷ் பாகல் வீட்டில் இன்று காலைமுதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகேலின் வீட்டிற்கு வெளியே ஏராளமான காங்கிரஸ் தலைவர்களும் தொழிலாளர்களும் கூடியுள்ளனர்.

மாநிலத்தின் உயர்மட்ட காங்கிரஸ் தலைமையை பாஜக தலைமையிலான மத்திய அரசு தீங்கிழைக்கும் நோக்கத்துடன் குறிவைக்கப்படுகிறது. இது மத்திய அரசின் சதி என்று பாகல் கூறினார்.

மத்திய அரசின் சதித்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க நாங்கள் இங்குக் கூடியுள்ளோம் என்று போராட்டக்காரர்களில் ஒருவரான காங்கிரஸ் ஊழியர் தெரிவித்தார்.

"மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை!" - கனிமொழி

மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது... மேலும் பார்க்க

மோடி, அமித் ஷாவின் வளர்ப்புப் பிராணியாக மாறிய அமலாக்கத்துறை: மாணிக்கம் தாகூர்

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல், அவரது மகன் சைதன்யா பகேலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதைக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் தரையிறக்கம்

நியூயார்க்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மும்பையில் தரையிறக்கப்பட்டது. 320க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் திங்கள்கிழமை கால... மேலும் பார்க்க

திமுக எம்.பி.க்கள் பற்றி தவறான கருத்து: திரும்பப் பெற்றார் பிரதான்!

திமுக எம்.பி.க்கள் குறித்து தவறாகப் பேசியதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று(மார்ச் 10) தொடங்கி நடைபெற்... மேலும் பார்க்க

ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) தேர்தலுக்கான வேட்பாளராக சோமு வீரராஜுவை பாஜக அறிவித்துள்ளது. எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து ஆந்திர சட்டமேலவை உறுப்பினர்களு... மேலும் பார்க்க

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக கூறி இரட்டைக் குழந்தைகளை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் வசித்து வருபவர் மகேஷ் சக்லனி. இவருடைய மனைவி சுப... மேலும் பார்க்க