செய்திகள் :

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் தரையிறக்கம்

post image

நியூயார்க்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மும்பையில் தரையிறக்கப்பட்டது.

320க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் திங்கள்கிழமை காலை நியூயார்க்கிற்கு புறப்பட்டது. நடுவானில் விமானத்தின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த விமானம் மீண்டும் மும்பையில் தரையிறக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

விமானத்தின் கழிப்பறைகளில் ஒன்றில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

நியூயார்க் சென்ற போயிங் 777-300 ER விமானத்தில் 19 பணியாளர்கள் உள்பட 322 பேர் இருந்ததாக வட்டாரங்களில் ஒன்று தெரிவித்துள்ளது.

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது

இந்தியாவில் சமீபகாலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது ஒரு தொடர் நிகழ்வாக உள்ளது. வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, பல விமானங்களில் அவசர சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரம் 2047-க்குள் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்கும்: அஜித் பவார்

பிரதமரின் வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் மாநிலம் முன்னணிப் பங்காற்றத் தயாராக உள்ளதாக மகாராஷ்டிரம் துணை முதல்வர் அஜித் பவார் கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன... மேலும் பார்க்க

ஸோஹோவின் இ-ஸ்கூட்டர்.. அறிமுக விலை இவ்வளவுதானா? தள்ளுபடியுமா?

ஸோஹோவின் அல்ட்ராவயலட் நிறுவனத்தின் முதல் இ-ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் குவிந்து வருகிறது. அதனால், தள்ளுபடியையும் நிறுவனம் அதிரடியாக அறிவித்து வருகிறது.தகவல்தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஸோஹோ ந... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் எப்படி இருந்தது?

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் இன்று கணிதப் பாடத் தேர்வு நடைபெற்றது.நாட... மேலும் பார்க்க

'ஹோலி பண்டிகையன்று முஸ்லீம்கள் வீட்டிற்குள்ளேயே இருங்கள்' - பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு!

ஹோலி பண்டிகையன்று முஸ்லீம்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிகார் பாஜக எம்எல்ஏ ஒருவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் மதுபானி மாவட்டம் பிஸ்ஃபி தொகுதி எம்எல்ஏ ஹரிபூ... மேலும் பார்க்க

தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி: மக்களவையில் பாஜக எம்பி

தமிழைவிட சமஸ்கிருதமே பழமையான மொழி என்று மக்களவையில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே திங்கள்கிழமை பேசியுள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை தொடங்கிய நிலையில், தேசிய கல்விக் ... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும்: ராகுல்

வாக்காளர் பட்டியல் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தின் மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தினார். பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன... மேலும் பார்க்க