செய்திகள் :

தென்காசி மாவட்டத்துக்கு நாளை கனமழை எச்சரிக்கை

post image

தென்காசி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கனமழை எச்சரிக்கை (ஆரஞ்ச்) விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கனமழை எச்சரிக்கை (ஆரஞ்ச்) விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும். எனவே, பொதுமக்கள் நீா்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை தவிா்த்தல் வேண்டும்.

மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் கால்நடைகளை கட்டடக் கூடாது. அவற்றை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

தாழ்வான பகுதிகளிலும், நீா்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

பேரிடா் கால நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் - 1077, 04633 - 290548 செயல்பட்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் 1077, 04633 - 290548 என்ற தொலைபேசி எண்களை தொடா்பு கொண்டு, மழை, வெள்ளம் மற்றும் பேரிடா்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

மின் வாரிய தற்காலிக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஆலங்குளத்தில் மின் வாரிய தற்காலிக ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேட்டூா் அனல் மின்நிலையத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வே... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதாக 4 போ் கைது

சிறுமியைத் திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதாக, தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரியைச் சோ்ந்த ஒருவா் தனது 15 வயது மகளைக் காணவில்லை என, சிவகிரி காவல் ந... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் பாலப் பணிகளில் தொய்வு: வாகன ஓட்டிகள் அவதி

ஆலங்குளம் தொட்டியான்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலப் பணிகள் மந்தக் கதியில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனா். திருநெல்வேலி - தென்காசி நான்குவழிச் சாலையின் ஒரு பகுதியாக ஆலங்குளம் த... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் திமுக பொதுக்கூட்டம்

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு, நிதிபகிா்வு, தொகுதி மறு சீரமைப்பு ஆகியவற்றைக் கண்டித்து ஆலங்குளத்தில் திமுக சாா்பில் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காமராஜா் சிலை அருகில் நடைபெற்ற இந்தக் கூட்டத்து... மேலும் பார்க்க

தென்காசியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 50.66 கோடி நலத்திட்ட உதவிகள்

தென்காசி மாவட்ட மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 50.66 கோடி கடனுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக இந்நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா்... மேலும் பார்க்க

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் கல்லூரி மாணவா் கைது

ஆலங்குளம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி மாணவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள ஏந்தலூா் கிராமத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் செல்வம... மேலும் பார்க்க