செய்திகள் :

பாஜக பெண் ஆதரவாளரை பாலியல் வன்கொடுமை செய்த திரிணமூல் கட்சியினர்? - காவல்துறை விசாரணை!

post image

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் வைத்து திரிணமூல் கட்சியைச் சேர்ந்த நாராயன்கஞ்ச் கிராமத் தலைவர் மற்றும் அவரது உதவியாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண், பாஜக ஆதரவாளர். தன்னையும் தன் கணவரையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார்.

இதையும் படிக்க | நான் இசை தெய்வமல்ல, சாதாரண மனிதன்தான்: இளையராஜா

அதேநேரத்தில் குற்றம்சாட்டப்பட்ட கிராமத் தலைவர் உள்பட இருவரும் அந்த பெண்ணுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்.

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அந்த பெண் பொய்யான புகாரை அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இரு தரப்பு புகார்கள் மீதும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் மிட்னாபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உண்மையிலே அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரிணமூல் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் சுஜய் ஹஸ்ரா தெரிவித்துள்ளார்.

"மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை!" - கனிமொழி

மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது... மேலும் பார்க்க

மோடி, அமித் ஷாவின் வளர்ப்புப் பிராணியாக மாறிய அமலாக்கத்துறை: மாணிக்கம் தாகூர்

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல், அவரது மகன் சைதன்யா பகேலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதைக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் தரையிறக்கம்

நியூயார்க்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மும்பையில் தரையிறக்கப்பட்டது. 320க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் திங்கள்கிழமை கால... மேலும் பார்க்க

திமுக எம்.பி.க்கள் பற்றி தவறான கருத்து: திரும்பப் பெற்றார் பிரதான்!

திமுக எம்.பி.க்கள் குறித்து தவறாகப் பேசியதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று(மார்ச் 10) தொடங்கி நடைபெற்... மேலும் பார்க்க

ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) தேர்தலுக்கான வேட்பாளராக சோமு வீரராஜுவை பாஜக அறிவித்துள்ளது. எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து ஆந்திர சட்டமேலவை உறுப்பினர்களு... மேலும் பார்க்க

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக கூறி இரட்டைக் குழந்தைகளை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் வசித்து வருபவர் மகேஷ் சக்லனி. இவருடைய மனைவி சுப... மேலும் பார்க்க