செய்திகள் :

டிரம்ப் நிர்வாகத்தில் பொறுப்பேற்றதுமுதல் சரியும் எலான் மஸ்க்!

post image

அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் மதிப்பு 7வது வாரமாகத் தொடர்ந்து சரிந்துள்ளது.

டெஸ்லாவின் மதிப்பு கடந்த வாரத்தில் 10% சரிந்த நிலையில், இதுவரை 800 பில்லியன் டாலர் (6.9 ஆயிரம் கோடி) வரை சரிவைச் சந்தித்துள்ளது.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரும் அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) பொறுப்பாளருமான எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

சமீபகாலமாக இவரின் சொத்து மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அதாவது அமெரிக்க அரசாங்கத்தின் செலவுகளைக் குறைக்கும், செயல்திறன் மேம்பாட்டுத் துறைக்கு (டிஓஜிஇ) தலைமைப் பொறுப்பேற்றது முதலே அவரின் சொத்து மதிப்புகள் இறங்கு முகத்தில் உள்ளன.

கடந்த மாதம் எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 22.2 பில்லியன் சரிந்து 358 பில்லியனாக இருந்தது. இதற்கு பெரும்பாலும் டெஸ்லா பங்குகளில் சரிவே காரணமாக இருந்தது.

இதனிடையே 7வது வாரமாக டெஸ்லாவின் மதிப்பு சரிந்துள்ளது. வணிக நாளான கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 7) 10% சரிந்துள்ளது. இதன்மூலம் அதன் உச்ச மதிப்பில் இருந்து 800 பில்லியன் டாலர் வரை டெஸ்லா மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

டெஸ்லா நிறுவனம் சந்தித்த மிகப்பெரிய சரிவு இதுவாகும். இதற்கு முன்பு கடந்த டிசம்பர் 17ஆம் தேதி 480 பில்லியன் டாலர் சரிந்ததே அதிகபட்சமாக இருந்தது.

இதனிடையே அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில், எலான் மஸ்க் பொறுப்பேற்றதில் இருந்தே அவரின் சொத்து மதிப்பு சரிந்து வருவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதையும் படிக்க | மின்சார காா்களின் விற்பனை 19% அதிகரிப்பு

இதையும் படிக்க | ராகுலின் உதவியால் தொழிலதிபராகும் செருப்புத் தைக்கும் தொழிலாளி!

இந்தியாவில் 200 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்ய ஹையர் நிர்ணயம்!

நொய்டா: ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 200 கோடி அமெரிக்க டாலர் விற்பனை நிறுவனமாக மாறும் என்று தெரிவித்துள்ளது.வீட்டு உபகரணங்கள் தயாரிப்பாளரான ஹையர், புதிய ஏசி உற்பத்தி மற்றும் ... மேலும் பார்க்க

மகளிருக்கான சிறப்பு கடன் திட்டம்: எஸ்பிஐ அறிமுகம்

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பெண் தொழில்முனைவோருக்கான சிறப்பு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து வங... மேலும் பார்க்க

மின்சாரக் காா்களின் விற்பனை 19% அதிகரிப்பு

இந்தியாவில் மின்சார பயணிகள் வாகனங்களின் விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 18.95 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பத... மேலும் பார்க்க

சக்கைப்போடு போடும் 7-சீட்டர் கார் இதுதான்! விலைக்காகவே வாங்கலாம்!!

இந்திய வாகனச் சந்தையில், 7 இருக்கை வசதிகொண்ட கார்களின் தகப்பன் என்று சொல்லும் அளவுக்கு பெயர் பெற்றிருக்கிறது மாருதி சுசூகி எர்டிகா.இந்தியாவில், எப்போதும் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்து செல்லும் அளவுக்கு ... மேலும் பார்க்க

ஹூண்டாய் விற்பனை 3% சரிவு

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் 3 ரிந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்... மேலும் பார்க்க

விரைவில் ஏடிஎம் மையத்திலிருந்து பிஎஃப் பணம் எடுக்கும் வசதி!

ஹைதராபாத்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 'ஈபிஎஃப்ஓ 3.0' என்ற புதிய முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை நேரடியாக ஏடிஎம்களிலிருந்து பெற... மேலும் பார்க்க